ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதால் கன்னியாகுமரி சீசன் கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்

நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குமரிக்கு வந்து செல்வார்கள்.தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகள் வருவர்.
சீசனை எதிர்நோக்கி காத்திருக்கும் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியின் எழில்மிகு தோற்றத்தை படத்தில் காணலாம்.
சீசனை எதிர்நோக்கி காத்திருக்கும் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியின் எழில்மிகு தோற்றத்தை படத்தில் காணலாம்.
Published on

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சபரிமலை சீசன் கால மாக கருதப்படுகிறது. மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலங்களில் இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.

அதுமட்டுமின்றி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

இந்த சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக கன்னியா குமரியில் நடைபாதை களில் சீசன் கடைகள் அமைப்பதற்கான அனு மதியை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் மூலம் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி யில் சீசன் கடைகள் நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதனால் கன்னியா குமரியில் சீசன் கடைகள் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் பேரூராட்சி நிர்வாகம் சீசன் கால முன்னேற்பாடுகளை செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் முற்றிலுமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் 2 ஆண்டு களுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி கன்னியா குமரியில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்து மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.இத னால் இந்த ஆண்டும் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பதில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சீசன் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கன்னியா குமரியில் சீசனுக்கான எந்தவித முன்னேற்பாடு களும் செய்ய முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதன் பிறகு தான் சீசனுக்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com