search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northerners"

    • வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, ஈரோடு மாநகர் பகுதி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.

    குறிப்பாக பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உற்சா கமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதற்காக ஈரோட்டில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    மேலும் ஈரோட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு முதலே ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் இந்திரா நகர், கருங்கல் பாளையம், கே.எஸ்.நகர், திருநகர் காலனி, வளையகார வீதி, வி.வி.சி.ஆர். நகர், அக்ரஹார வீதி போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி னர்.

    ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர்.

    • கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    • அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

    சூலூர்:

    சூலூர் அருகே அரசூர் பகுதியில் செந்தில் கோழிப் பண்ணை உள்ளது. இங்கு பொத்தியாம ்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சதாசிவம் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்த கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் வாராவாரம் அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வேனில் சந்தைக்கு சென்று வட மாநிலத்தவர்கள் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்தனர்.

    அரசூர் அருகே அன்னூர் செல்லும் பாதையில் வரப் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, வடமாநி லத்தவர்களை, குடிபோதையில் 4 வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், ஆபாசமான வார்த்தைகளை பேசினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகால் திட்டி மிரட்டல் விடுத்தனர். பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர்கள் சென்று விட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் மேற்பார்வையாளர் சதாசிவத்திடம் தெரிவித்தனர். அவர் சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில் வடமாநிலத்தவர்களை மிரட்டியது, சிவானந்தபுரம் சங்கர் அப்பன் தோட்டத்தை சேர்ந்த குமார்(38), காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த சிவகுமார்(33), சரவணம்பட்டி ஜனதா நகரைச் சேர்ந்த ஆனந்தன் (37), சரவணம்பட்டி பெரிய கவுண்டர் வீதியைச் சேர்ந்த ஹரிஹரன்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    ×