search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggression"

    • பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள்.
    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர்தான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தங்களின் நடை, உடை, பாவனைகள் பிள்ளைகளிடத்தில் பிரதிபலிக்கும் என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் பின்பற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை பார்த்து பிள்ளைகளும் அவற்றை பின்தொடர்வார்கள். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றியும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    ஒழுங்கற்ற நடத்தை:

    தாய், தந்தையரில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கமாட்டார்கள். காபி பருகினால் டம்ளரை பருகிய இடத்திலேயே வைத்துவிடுவார்கள். அவரசமாக புறப்படும்போது குளித்துவிட்டு வந்த டவலை நாற்காலியில் அப்படியே போட்டுவிடுவார்கள். ஆடை மாற்றும்போதும் ஏற்கனவே உடுத்தி இருந்த ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் வீசிவிடுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை நேர்த்தியாக மடித்து அலமாரியில் வைக்கமாட்டார்கள்.

    வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே காலணிகளை நேர்த்தியாக கழற்றி வைக்காமல் தனித்தனியாக சிதறி கிடக்கும் நிலையில் வைத்திருப்பார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனையே பின்பற்ற தொடங்குவார்கள். அது வாழ்நாள் முழுவதும் பின்தொடர வழிவகுத்துவிடும். அதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தங்கள் பழக்கவழக்கங்களில் ஒழுங்கற்ற நடத்தைக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

     போட்டி மனப்பான்மை

    பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களின் திறன்களை மதிப்பிடுகிறார்கள். அப்படி செயல்படுவது குழந்தைகள் தங்களுடைய தனித்திறனை கண்டறியவோ, மெருகேற்றவோ வழி இல்லாமல் போய்விடும். மற்றவர்களுடன் கடுமையாக போட்டிப்போடும் மன நிலையே மேலோங்கும். அது அவர்களின் சுய மரியாதையை எதிர்மறையாக பாதிக்கலாம். இத்தகைய போட்டியில் வெற்றிபெற முடியாமல் போகும்போது விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு உண்டாகலாம். குழந்தைகள் சுயமாகவே தங்கள் திறமையை அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கிவிடக்கூடாது.

    சுகாதாரம்

    தினமும் குளிப்பது, உள்ளாடைகளை மாற்றுவது, சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேர்த்தியாக ஆடை அணிவது போன்ற பழக்கவழக்கங்களை பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின்பே எந்த உணவுப்பொருளையும் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் பல் துலக்காமல் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை என்று கூறி அத்தகைய பழக்கத்தை பின்பற்றுபவராக இருந்தால் குழந்தைகளும் அப்படியே செயல்பட தொடங்கிவிடும். இது வாய்வழி சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தினமும் குளிக்கும் வழக்கத்தை பின்பற்ற தவறினால் குழந்தைகளுக்கும் அத்தகைய பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     மற்றவர்களை தாக்குதல்

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அடித்து கண்டிக்கும் பழக்கத்தை பெற்றோர் பின்பற்றக்கூடாது. தவறு செய்தவர்களை அடிப்பதுதான் சரி என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். தங்களிடம் பிரச்சினை செய்யும் மற்ற குழந்தைகளை அடிக்கும் பழக்கத்தை பின்பற்றிவிடுவார்கள். தவறு செய்யும்போது மென்மையாக கண்டிக்கும் அணுகுமுறையை பின்பற்றினால்தான் குழந்தைகளும் அத்தகைய பழக்கத்தை பின் தொடர்வார்கள்.

    வார்த்தைகள்

    குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகள் பேச ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் பயன்படுத்தும் சொற்களை கொண்டு தங்களுடைய சொற்களஞ்சியத்தை உருவாக்குவார்கள். பெற்றோர் கெட்ட வார்த்தைகள் பேசினால் அதுவும் அவர்கள் மனதில் பதிந்துவிடும். தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, மற்றவர்களின் குடும்ப விஷயங்களை பேசுவது, பிறரை விமர்சனம் செய்வது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

     நகம் கடித்தல்

    மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர் நகம் கடிப்பார்கள். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். அந்த பழக்கத்தை குறிப்பிட்ட வயதுக்குள் கைவிட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுதல்

    மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பெற்றோர் அதிகமாக பயன்படுத்தினால் குழந்தைகளும் அந்த நடைமுறையை கையாள தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் குறிப்பிட்ட நேரமே பார்க்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதன் மூலம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மீது குழந்தைகள் மோகம் கொள்வதை தவிர்க்க முடியும்.

     ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

    உணவு, நொறுக்குத்தீனி வகைகளை சாப்பிடும்போது அவை தரையில் விழாமல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அப்படி சாப்பிட பழகுவார்கள். உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் உணவுப்பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கேக், மிட்டாய் போன்ற அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை உட்கொள்ளக்கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளை பெற்றோர் பின்பற்றினால்தான் குழந்தைகளிடத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.

    • இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஆணையாளர் காந்திராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நேரில் வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. ஊடக பிரிவை சேர்ந்த சதீஷ், போராட்டத்தில் பதட்டம் நிலவுவதாகவும், அனைவரும் உடனே வரவேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர். இதனை அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் முதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
    • அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் ரவுண்டனா அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை அரசு இடத்தில் கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அ.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்ததால், கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம் தலைமையில், உதவி பொறியாளர் ஷர்மா மற்றும் சாலை பணியாளர்கள் ரிஷிவந்தியத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே வாரி புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த வாரியின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து செல்கின்றன. இந்நிலையில் வாரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்ற கோரி தனிநபர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். 

    தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிகாரிகள் வருகிற 28- ந் தேதி வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.
    • நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தியாகும்.

    கடலூர் :

    வடலூர் நகரில் சமீப காலமாக வாகன போக்கு வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடலூர் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் பெரும்பாலும் மாற்று இடங்களில் செயல்பட துவங்கி உள்ளன. இந்த கடைகள் பண்ருட்டி சாலையில் அதிக அளவில் செயல்படுகின்றன. ஓட்டல்கள், டீக்கடைகள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கடைகள் இந்தப் பகுதியில் செயல்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இது போன்ற சூழலில் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக ெரயில்வே கேட் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் 2 பேரும், நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தி யாகும். குறிப்பாக ெரயில்வே கேட் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையி லேயே நிறுத்தி விட்டு செல்வது பெரும் இடையூறாக உள்ளது. இதே போல புதிதாக துவக்க ப்பட்ட பல டீக்கடைகள் முன்பு நிறுத்த ப்படும் வாகனங்க ளாலும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு போலீ சார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    எனவே, வடலூர் 4 முனை சந்திப்பிலிருந்து பண்ருட்டி சாலையில் நெய்சர் பஸ் நிறுத்தம் வரை சாலை ஓரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகள் முன் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மாற்று இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெய்வேலி இந்திரா நகர் முதல் மறுவாய் வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. 60 அடி சாலையின் நடுவில் 30 அடி மட்டுமே புது சாலை போடப்பட்டதால் 2 புறமும் பழைய சாலைகள் அப்படியே உள்ளன. இதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் பிற வாகனங்களுக்கு வழி விடும்போது 2 சாலைகளுக்கும் நடுவே உள்ள உயர வித்தியாசத்தால் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. அப்போது வரும் கனரக வாகனத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த சாலைகளை பழைய நிலையிலையே அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர்.
    • ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர். 20 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மணலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியதுடன் அகற்றப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    கடலூர்:

    புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

    இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.


    ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் இந்திரா காந்தி சாலையில் பெருமளவுக்குஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதாவது 100 அடி சாலையானது தற்போது 10 அடியாக குறுகி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில்இருந்து வெளியே வரும் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நகராட்சி ஆணையாளர்மகேஸ்வரி, நகர நில அளவையர்அசோக் குமார்ஆகியோர் இந்திரா காந்தி சாலை பஸ் நிலையம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பூமி நிலை வரதராஜ பெருமாள், பிடாரி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சந்திரசேகரன் அவரது தந்தை மற்றும் பாட்டனார் நிர்வகித்து வந்துள்ளனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள குருங்குளம் அக்ரஹாரத் தெருவில் வசித்த தற்போது சென்னை சாலிகிராமம் ஆற்காடு ரோடு வசித்து வருபவர் சந்திரசேகரன் (வயது 65). குருங்குளம் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பூமி நிலை வரதராஜ பெருமாள், பிடாரி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சந்திரசேகரன், இவரது தந்தை மற்றும் பாட்டனார் நிர்வகித்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது சந்திரசேகரன் பராமரித்து வந்தார்.

    இவர்களின் பராமரி ப்பில் இருக்கும் நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தை குருங்குளம் ஜெயன் மகன் செல்வம் ஆக்கிரமித்து உள்ளார். இதனைக் கேள்விப்பட்ட சந்திரசேகரன், அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனது பாதுகாப்பிற்கு கொண்டு வந்தார்.

    இந்த சொந்த ஊருக்கு வந்த சந்திரசேகரனை ஜெயன் மகன் செல்வம், சுகுமாரன், சாமிநாதன் மற்றும் ஜெயன் மகள் தமிழரசி ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து சந்திரசேகரன் பேரளம் போலீசில் தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடக்குமாங்குடி பகுதியில் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி பகுதியின் முக்கிய வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தினால் தேவையற்ற செடி, கொடிகள் ஏராளமாக மண்டியுள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமலும், மழைக்காலங்களில் வடிகால் ஆக பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. 

    மேலும் இப்பகுதியில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைகாலங்களில் குடியிறுப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களில் தேங்கி நிற்கிறது.இதனால் பல்வேறு தொற்று நோய்கள் கிராமங்களில் பரவ காரணமாக அமைகிறது. மேலும் வடக்குமாங்குடி கடைவீதி பகுதியில் வாய்க்காலின் பெரும்பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் செல்வது தடைபடுகிறது. வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட வேண்டி கிராமமக்கள், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் பல வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×