search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil resistance"

    • சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள மேலக்கால் -பேரணை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் 120 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையெடுத்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலக்கால்-பேரணை சாலையை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோர பகுதியில் குடியிருந்து வருகிறோம். மேலும் இருக்கும் இடத்திற்கு பட்டா, , சொத்து வரி, மின் கட்டணம் கட்டி வருகிறோம் இப்போது காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    ×