search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roadside shops"

    • சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
    • மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.

    அவினாசி: 

    அவிநாசி நகரப் பகுதியில் சாலையோரங்களில் புதிய புதிய கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.

    சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் செப்டம்பா் 22-ந் தேதி நடைபெற்றது. இதில், சாலையோரக் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை வளாகத்துக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், அக்டோபா் 1-ந் தேதி முதல் தீா்மானம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.

    • திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது.
    • பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் பிருந்தாவன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அடுத்த மாதம் 9-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், அந்த கூட்டத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இணைப்பு சங்கமாக மாற்றுவது.

    மே 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும், வியாபாரிகளும் கடைகளை அடைத்து, அந்த மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.பெருகி வரும் சாலையோர வியாபாரிகளால் அனைத்து கடை வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் சாலையோர கடைகள் அமைப்பதை தவிர்த்து அதற்கென ஒரு இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.

    புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது. திருப்பூர் மாநகரில் சாலைகள் மீண்டும் மீண்டும் தோண்டப்படுவதால் கடைகளில் வியாபாரம் பாதிக்கிறது. எனவே சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புதுவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றது.
    • இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும், தள்ளுவண்டிகளும் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றது. இதில் அன்றாட வயிற்று பிழைப்புக்காக தள்ளுவண்டி உள்ளிட்டவைகள் மூலம் வைத்துள்ள நடைபாதை கடைகளும் அகற்றப்பட்டு வருகின்றது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும், தள்ளுவண்டிகளும் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

    ஆனால் சாலையோர கடைகளை அகற்ற வரும் அதிகாரிகள் முதலில் எளிதில் அகற்ற கூடிய வகையில் உள்ள கடைகளைத்தான் அகற்றி வருகின்றனர். இவ்வளவுக்கும் அவர்கள் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வரிகளையும் செலுத்தி வந்துள்ளனர். அதற்கான ரசீதுகளை காண்பித்தாலும் அகற்றப்பட்டு வருகின்றது.

    மேலும் எளிதில் அகற்ற கூடிய சாலையோர வியாபாரிகளை அகற்றும் அதிகாரிகளும், போலீசாரும் நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான சாலையோர இடத்தில் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ள கடைகளின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    கைவிட வேண்டும்

    எனவே அன்றாட வயிற்று பிழைப்புக்காக சாலையோரத்தில் வைத்துள்ள கடைகளை அகற்றும் பணியை கைவிட வேண்டும். அல்லது முதலில் சாலையோரத்தில் கட்டிடங்களை கட்டி லட்சகணக்கில் சம்பாதித்து கோடீஸ்வரர்களாகி யுள்ளவர்களின் கடைகளை முதலில் அகற்ற வேண்டும்.

    மாறாக அராஜகமான நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் சமூக ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×