search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train delay"

    • மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.

    இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.

    இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
    • அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    தருமபுரி:

    சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.

    பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    • விழுப்புரம்-திருப்பதி ெரயில் ஒரு மணி நேரம் தாமதம்
    • இடம் பிடிக்க முண்டியடித்து ஏறினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் ரெயில் மூலம் திருவண்ணா மலையில் குவிந்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    இதையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் அவதி அடைந்தனர்.பஸ்சில் உட்கார இடம் கிடைக்காததால் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

    இதனால் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்த பக்தர்கள் திருவண்ணாமலை ெரயில் நிலையத்தில் குவிந்தனர். இன்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து திருப்பதி நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல ரெயில் நிலையத்தில் பக்தர்களின் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. சரியாக 6.30 மணிக்கு வரவேண்டிய விழுப்புரம் திருப்பதி பயணிகள் ெரயில் 7.45 மணிக்கு 1 மணி நேரம் தாமதமாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரெயிலில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றதால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஏற்கனவே கிரிவலப் பாதையில் நடந்து சென்று வந்த களைப்பில் இருந்த பக்தர்கள் இதனால் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயணிகள் ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு கோவை, சூலூர், சோமனூர், இருகூர், பெருந்துறை, ஈரோடு, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தினமும் காலையில் ரெயிலில் வேலைக்கு சென்று விட்டு மாலை ரெயில் மூலம் வீடு திரும்புவார்கள். இதற்காக மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துள்ளனர்.

    கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் பயணிகள் ரெயிலில் தான் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவார்கள்.

    நாகர்கோவில் - கோவை பயணிகள் ரெயில் வழக்கமாக இரவு 7.10 மணிக்கு திருப்பூர் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் கடந்த சில நாட்களாக இரவு 9.30 மணி, 10 மணிக்குதான் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மாலை வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் காத்து கிடந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து கோவை வந்த உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். ஏராளமான தொழிலாளர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

    இது குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்கள் நாகர்கோவில் பயணிகள் ரெயில் மாலை 6.30 மணிக்கு ஈரோடு வந்து விடுகிறது. ஆனால் திருப்பூருக்கு வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமாக தான் வருகிறது என குற்றம் சாட்டினார்கள்.

    அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். பயணிகள் ரெயில் குறித்த நேரத்தில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    ×