என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tree"
- புதுக்கோட்டை உழவர் சந்தையில் பழமையான வாகை மரம் வெட்டப்பட்டுள்ளது
- சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
- மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது.
- மரங்களுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:- மரங்கள் உயிரின் சுவாசம் போன்றது மரங்க ளுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.
இதனால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கிறது.
எதையும் உணர்ந்து பார்க்கும் போது தான் அதன் சிறப்புகள் வெளிப்படும் அப்படித்தான் மரங்கள் மரங்களை நட்டு அவற்றுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் அவற்றின் பயன் முழுமையாக கிடைக்கும் தற்போது திருமண விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது இது நமக்குள் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை உணர்த்துகிறது என்றார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி சுபாஷ்சந்திரபோஸ், வழக்கறிஞர் சங்க தலைவர் பாரி வழக்கறிஞர் சங்க செயலாளர் பாரதிராஜா, துணை தலைவர் வெங்கடேஷ், பொருளார் மதியழகன் துணை செயலாளர் வீரகுமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணிவண்ணன், குமரவேல், மாதவன், அறிவுச்செல்வன், பாலசுப்பிரமணியன், அன்பரசு, மகேஷ், .கலியராஜன், ராஜசேகர், சுதாகர், ராஜ்குமார், குலாளன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
- ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை மற்றும் மலையறையில் பாதையில் அவ்வப்போது மண் சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறை மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை, தீயணைப்பு துறையினரும் இணைந்து ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தீயணைப்புத் துறையினர் அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார ப்பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மோத்தேபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த சுமார் 80 அடி உயரமுள்ள ராட்சத மரம் சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த மற்றொரு மரமும் சேர்ந்து சாய்ந்தது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் ராட்சத மரங்களை அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்டது.
சாலையில் விழுந்த மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பொக்லைன் எந்திரம் மூலம் பழமையான ஆலமரத்தை வேருடன் அகற்றிய கொடூரம்
- பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.இந்த மரம் அப்பகுதியில் ஆடுமாடு மேய்ப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களும் இளைப்பாறும் இடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த ஆலமரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேருடன் வெட்டி அப்புறப்படுத்திவிட்டனர்.பசுமையான ஆலமரத்தை கும்பல் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டியது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபற்றி நிண்ணியூர் மேலத்தெரு ஊராட்சி உறுப்பினர் கவிவண்ணியா, பார்வதி மற்றும் பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
- 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மஹா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 10.15 மணி முதல் 11.30 மணி வரை புதிய கொடி மரம் நிறுவுதல், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுர கலசங்களுக்கு பாலாலயம் செய்தல், 19-ந் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கணபதி வழிபாடு, கிராமசாந்தி , அஷ்ட பலி பூஜை, 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாரி ஊர்வலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து நடைபெறும்.
இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திஷா ஹோமம், காப்பு கட்டுதல், 25-ந் தேதி 9.30 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை 2-ம் கால யாக பூைஜ, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம் , மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர் கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
- மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.
இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.
இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சமடைந்தனர்.
- சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத் தின் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகி றது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்க ளாக திருச்சுழி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான வாகை மரம் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.
இதைப்பார்த்த பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மரம் விழுந்ததில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் முற் றிலும் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரத்தின் உதவியோடு அறுத்து அப்பு றப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் திருச் சுழி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
- ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
- ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழுப்புரம்:
மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் உலக ஓசோன் தினத்தை பெற்றோர்கள் மற்றும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
பள்ளி தாளாளர் அருணாச்சலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, புவி வெப்பமய மாதலை தடுக்க மாணவர்கள் அனைவரும் ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி செயலாளர் பாரதியார் ரவிக்குமார் முன்னிலை யில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓசோன் படலத்தை பாதுகாப்போம் உறுதி மொழி ஏற்றனர்.
- பல்லடம் சுற்றுவட்டரா பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
- அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது.
பல்லடம்:
பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே இருந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் காரணமாக, அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் சேதமடைந்தன. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆட்டோக்கள் மீது விழுந்த மரத்தை அகற்றினர்.
இந்த நிலையில் அதே பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மற்றொரு மரம் நேற்று முன்தினம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விலங்குகள் நடமாடும் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
- வனத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் விலை உச்சத்தில் இருந்து வந்தன. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்ப சலனம் குறைந்துள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் பத்ரகாளியம்மன் கோவில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்திருந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன்பின் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்தனர்.
- தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.
- வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உண்டாகிறது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராணி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் அருண் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் குறித்து பேசியதாவது,
இந்த சிவப்பு கூன்வண்டு தாக்குதல் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை அதிக அளவில் தென்னையை தாக்குகின்றன. இயந்திரங்கள் மூலம் உலவும் மேற்கொள்ளும் பொழுது காயங்கள் ஏற்படுவதால் அதிக அளவில் குருத்துகளை தாக்குகின்றன.
இவ்வாறு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.
இதனால் மரங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. இந்தப் பாதிப்பு வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளாகிறது.
இதனை கட்டுப்படுத்தும் மாதங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகும்.
இதனை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு என்ற அளவில் பயன்படுத்தலாம் என்றார்.
மேலும் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறினார்.
தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்து நடுவது குறித்தும், நீர் மேலாண்மையில் சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த உரம் வேளாண்மை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், பயிர் அறுவடை களப்பணியா ளர்கள் மற்றும் உழவர் நண்பர்கள், பண்ணை தகவல் ஆலோசனை குழுக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பொன் செல்வி, நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்