என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
Byமாலை மலர்12 Nov 2022 9:36 AM GMT
- மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
- மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம்
அரியலூர்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டைச் சேர்ந்தவர் அரோக்கியம் மகன் செல்வம்(வயது54). இவர், திண்டுக்கல்லிலிருந்து அரியலூருக்கு லாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்துள்ளார்.ெஜயங்கொண்டம் சாலையில், ஜெனரேட்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் கீழே இறக்கும் போது, அருகிலிருந்து புளிய மரத்தில் பொக்லைன் இயந்திரம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் மரத்தின் இடிபாடுகளில் சிக்கி அதேயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர், மரத்தை அகற்றி செல்வத்தின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால், அரியலூர்} ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X