search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hostel Complex"

    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர்.
    • மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியில் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த 100 ஆண்டுகால மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பா.ம.க, பா.ஜனதா கட்சியினர் புகார் செய்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ம.க. நகர செயலாளர் அண்ணாமலை, பா.ஜ.க. நகர செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த பாழடைந்த பழைய விடுதியை இடித்துவிட்டு நகராட்சி அலுவலகம் மற்றும் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்காக போதுமான இடவசதி இருந்தும் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர். இந்த மரங்கள் இருந்திருந்தால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மரங்களின் நிழலை பயன்படுத்த ஏதுவாக இருந்திருக்கும்.

    தற்போது அரசு அனுமதியின்றி இந்த வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டதால் கோடை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்க கூட இடமில்லாமல் கடும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×