search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strike workers"

    • பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

    அரவேணு :

    கோத்தகிரி மார்க்கெட் திடலில் நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் மணிமோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நவீன் சந்திரன், தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், செயலாளர் முருகேஷ், பொருளாளர் பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்த்தும் சில்வர் ஊக் காப்பி, கற்பூர, நகாமரம், சீகை போன்ற மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். தற்போது தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அதனை ஈடு கட்டும் விதமாக மரங்களை வெட்டுவதனால் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

    மேலும் பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பா ட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பயணிகள் ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு கோவை, சூலூர், சோமனூர், இருகூர், பெருந்துறை, ஈரோடு, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தினமும் காலையில் ரெயிலில் வேலைக்கு சென்று விட்டு மாலை ரெயில் மூலம் வீடு திரும்புவார்கள். இதற்காக மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துள்ளனர்.

    கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் பயணிகள் ரெயிலில் தான் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவார்கள்.

    நாகர்கோவில் - கோவை பயணிகள் ரெயில் வழக்கமாக இரவு 7.10 மணிக்கு திருப்பூர் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் கடந்த சில நாட்களாக இரவு 9.30 மணி, 10 மணிக்குதான் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மாலை வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் காத்து கிடந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து கோவை வந்த உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். ஏராளமான தொழிலாளர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

    இது குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்கள் நாகர்கோவில் பயணிகள் ரெயில் மாலை 6.30 மணிக்கு ஈரோடு வந்து விடுகிறது. ஆனால் திருப்பூருக்கு வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமாக தான் வருகிறது என குற்றம் சாட்டினார்கள்.

    அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். பயணிகள் ரெயில் குறித்த நேரத்தில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    ×