search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜமாபந்தி"

    மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி  நடைபெற்றது. 

    இதில்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும்,  பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும்  குடும்ப அட்டைகளை வழங்கினார். 

    இதில்   மேற்கு  ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், வடக்கு ஒன்றியக்  செயலாளர்  தமிழ்மாறன் மற்றும்  கிராம நிர்வாக அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள்,   பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
    பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கான 5-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் அர்த்தனாரிபாளையம், மாணிக்கம்நத்தம், பரமத்தி, வீரணம்பாளையம், புஞ்சை இடையார் (மேற்கு), வேலூர் பில்லூர்,சீராப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். 

    மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். 

    இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது.
    கீழக்கரை

    கீழக்கரை தாலுகா தாசில்தார் சரவணன் கூறியதாவது:-

    கீழக்கரை வட்டத்திலுள்ள 26 வருவாய் கிராமங்களுக்கு 1431 ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் (ஆய்வு) உதவி ஆணையாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.   

    பட்டா மாறுதல், பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமான குறைபாடுகளை  மக்கள் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்.  நாளை (1-ந்தேதி) திருஉத்தர கோசமங்கை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 2-ந்தேதி கீழக்கரை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 3-ந்தேதி திருப்புல்லாணி உள்வட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    ×