search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beginning"

    • பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    அவிநாசி:

    கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை அகில இந்திய வானொலி சாா்பில் உற்பத்தியை பெருக்கும் நாட்டுக்கோழி வளா்ப்பு முறைகள் எனும் தலைப்பில் வானொலி பண்ணை பள்ளி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் ஒரு வகுப்பு என மொத்தம் 13 வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், பயிற்சி கையேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். இந்த பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பண்ணை பள்ளி வகுப்புகளுக்கான கட்டணத்தை இம்மையத்தின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வங்கி சேவை வழியாகவோ செலுத்தலாம். இணைய வழியில் கட்டணம் செலுத்தியவா்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் உரிய பணப் பரிவா்த்தனை எண்ணுடன் தங்களுடைய பெயா், முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகிய தகவல்களை சோ்த்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443551869, 9442350740, 0421-2248524 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
    • விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை தொடங்கியது. இதில் ஆறுபடை வீடு, காரிய சித்தி ஆஞ்சநேயர் வளாகத்திலுள்ள ஷண்முகம் மஹாலில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், அங்குரார்ப்பனம் சங்கல்பம் ஆகியன நடைபெற்றது. பின்னர் முருகனின் வேலுக்கு காப்பு கட்டியவுடன், குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கணம் அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினார்கள்.

    விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார். சிவகிரி ஆதினம், உத்தண்டராஜகுரு சிவ சமயபண்டித குருசுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். வாவிபாளையம் ஞானபாரதி வெ.ஆனந்தகிருஷ்ணன் சொற்பொழிவு நடைபெற்றது.

    தொடர்ந்து முதல்நாள் யாகசாலை பூஜைகள், மண்டபார்ச்சனை, தீபாராதனை, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை ஆகியனவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி காலையில் கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில்கந்த சஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 8:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 18-ந்தேதி சஷ்டி அன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் வைபவம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    தாராபுரம் புதுபோலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளுடன் கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கினர். மாலை 4 மணிக்கு செண்பக சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஹோம பூஜைகளும் நடைபெற்றது. வருகிற 18-ந்தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு காலை 8 மணி முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு முருகபெருமானுக்கு வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் பாலமுருகன் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் வெண்மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் காலேஜ் ேராட்டில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    அவினாசி அருகே சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் கல்யாண சுப்பிரமணிய சாமிக்கு, கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17 -ந்தேதி வரை தினசரி அலங்கார பூஜைகளும், மகாதீபாராதனையும் நடக்கிறது.18-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பல்லடம் அருகே உள்ள முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் நேற்று விநாயகர் வேள்வியுடன் கந்தசஷ்டி விழாதொடங்கியது. 18-ந்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது.  

    • மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
    • வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
    • தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    காங்கயம்:

    மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை கண்டறிந்து அதனை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் தாராபுரம் மெயின் ரோடு பகுதியான ேபாலீஸ் நிலையம், பஞ்சாயத்து யூனியன், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபாரம் நிறுவனங்கள் பகுதிகளை உள்ளடக்கிய களிமேடு எனும் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறவில்லை. சில காரணங்களை காட்டி காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் பாதசாரிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் உடனடியாக களிமேடு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இல்ைலயெனில் கோரிக்கை நிறைவேறும் வரை காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட 2 முக்கிய இடங்களின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அமைச்சர், மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு களிமேடு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து போட்டோவுடன் மாலைமலரில் செய்தியும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
    • ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலையில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய் துறை சார்பில் உடுமலை தாலுகாவில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.

    வருவாய் கிராம அளவில் பட்டா ,சிட்டா, புல வரைபடம் ,அ பதிவு, பிறப்பு, இறப்பு ,விவசாயப் பணி மகசூல் என 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும் நிலஅளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலிகளும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளன.

    ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் ஜமாபந்தி நிகழ்வில் கிராம வாரியாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

    அவ்வகையில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராமங்களின் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) திருப்பூர் தனி துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 23-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    23-ந்தேதி உடுமலை உள் வட்டம் சின்ன வீரம்பட்டி, குறுஞ்சேரி ,அந்தியூர் ,வெனசுப்பட்டி, கணபதிபாளையம், உடுமலை, பெரியகோட்டை ,கணக்கம்பாளையம், தென்பூதி நத்தம், பூலாங்கிணறு ,ராகல் பாவி, ரா .வேலூர் ,வடபுதினத்தம், போடி பட்டி, கணக்கம்பாளையம், 1 கணக்கம்பாளையம் 2 ஆகிய கிராமங்கள்.

    24 ந் தேதி குறிச்சி கோட்டை உள் வட்டம் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், வெங்கடாபுரம் ,சின்ன குமாரபாளையம். குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலபட்டி, தளி , போகி கவுண்டன் தாசர்பட்டி ,குரல் குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர் 1, ஆண்டிய கவுண்டனூர் 2,மானுப்பட்டி,எலையமுத்தூர், கல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்கள்.

    25 ந் தேதி பெரிய வாளவாடி உள் வட்டம் வலைய பாளையம், எரிசனம்பட்டி,கொடுங்கியம் ,தின்னப்பட்டி, சர்க்கார் புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம், அரசூர் ,கிருஷ்ணாபுரம் ,சின்ன பாப்பனூத்து,பெரிய பாப்பனூத்து ,உடுக்கம்பாளையம், புங்க முத்தூர் ,செல்லப்பம்பாளையம், தேவனூர் புதூர் ,ராவணாபுரம் ,பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி, தீபாலப்பட்டி ,மொடக்குபட்டி உள்ளிட்ட கிராமங்கள்.

    26 ந் தேதி குடிமங்கலம் உள் வட்டம் பூளவாடி ,ஆத்து கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரிய பட்டி ,குப்பம்பாளையம் ,ஆமந்தகடவு, வடுகபாளையம் ,குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்கள்.

    30ந் தேதி பெதப்பம்பட்டி உள் வட்டம் மூங்கில் தொழுவு ,வாகை தொழுவு ,வீரம்பட்டி, பொங்கல் நகரம், சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி, முக்கூடு, ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி ,புதுப்பாளையம், இலுப்ப நகரம் ,பண்ணை கிணறு ஆகிய கிராமங்கள்.

    • கமுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்
    • ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

    பசும்பொன்

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பஸ் நிலையம் முன்பு நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.

    பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, முன்னாள் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன், காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் ஆதி, தி.மு.க. இளைஞரணி ஆதி ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் இதில் முத்து ராமலிங்கம், காங்கிரஸ் நகர தலைவர் சிதம்பர ராஜன், வழக்கறிஞர் நிறை பாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகினிங்.
    • இப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில், லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் (Lefty Manual Creations) தயாரிப்பில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் "பிகினிங்".ஆசியாவில் முதல்முறையாக 'ஸ்பிலிட் ஸ்கிரீனில்' இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

     

    பிகினிங்

    பிகினிங்

    இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. புதிவிதமாக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • உடுமலை அஞ்சல் உட்கோட்டம் மற்றும் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடந்தது.
    • செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உடுமலை:

    தேசிய அஞ்சல் வாரம் அக்டோபர் 9 முதல் 13-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, நிதி வலுவூட்டல் நாள் உடுமலை அஞ்சல் உட்கோட்டம் மற்றும் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடந்தது.

    இதில் 250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், ஜெயசீலன், உட் கோட்ட ஆய்வாளர் வெங்கட், இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் ரவி ஆனந்த், செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.
    • வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பி.என்., ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக பி.என்., ரோட்டில் பயணிக்க பல்வேறு ரக வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கணக்கெடுப்பு, ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:-

    கணக்கெடுப்பு பணி முடிந்து, விரிவான அறிக்கை மற்றும் கருத்துரு தயாரித்து நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு விபரங்களை சமர்பிக்கப்படும். அதன்பின், பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.

    பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து பாண்டியன் நகர் வரையுள்ள 5 கி.மீ., தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாலம் அமையும் போது வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
    • வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டி கொண்டு வர வேண்டும்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் பி.ஏ.பி. பாசனத்தின் கடைமடை பகுதியான இறுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மானாவாரி விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பை விவசாயிகள் பிரதானமாக செய்து வருகின்றனர். மேலும் கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி முருங்கை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்த்து வேறு வேலை வாய்ப்பு இல்லாததால், இப்பகுதி கிராமப்புற மக்கள் அருகில் உள்ள திருப்பூர், கரூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    மயில்ரங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் உபரியாக செல்லும் நீரை தேக்கும் வகையில் கஸ்தூரிபாளையம்-மயில்ரங்கம் இடையே தடுப்பணை ஒன்றைக் கட்டினால், தேங்கும் தண்ணீர் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் பெருகும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் ஜுன்,ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணை முழுமையாக நிறைந்து விடுகிறது. மேலும் ஒரே ஆண்டில் 2 முறைக்கு மேல் உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி அணையில் உபரியாக வெள்ள நீர் திறக்கும் காலங்களில் ஏறக்குறைய 2 டிஎம்சி. அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டு காவிரியில் கலந்து வருகிறது.

    இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், இந்த மாத துவக்கத்தில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 14 ந் தேதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் அன்றைய தினம் அணைக்கு நீர் வரத்து 12500 கன அடி வரை இருந்ததால்,9 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் அன்று மாலை வரை அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது‌‌. மேலும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான குதிரையாறு, சண்முகா நதி, நல்லதங்காள் ஓடை மூலமும் நீர் வரத்து பெற்று உபரியாக நீர் காவிரியில் கலந்து வருகிறது.

    அமராவதி அணையின் முழு கொள்ளளவான 4 டிஎம்சி.யில், ஏறக்குறைய அதே அளவுக்கு உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது. நிலை இவ்வாறு இருக்க கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மயில் ரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட ஆய்வுகள் நடந்ததாகவும், ஆனால் திடீரென தடுப்பணை அமைக்க அளவீட்டு பணிகள் மயில்ரங்கம் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி மேற்கு பகுதியில் அதிகாரிகள் நடத்தியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சில முக்கிய பிரமுகர்களின் தென்னந் தோப்புகள் அங்கு உள்ளதால், அவர்கள் பயன்பெறும் வகையில் அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் இடம் மாறியுள்ளதாக மயில் ரங்கம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் அமராவதி ஆற்று நீரை தடுத்து பாசனத்துக்கு திருப்பும் வகையில் தாராபுரம், காங்கயம் பகுதிகளில் உள்ள நில அமைப்பு ஆற்றை விட உயரமாக உள்ளதால், சிறு அளவிலான தடுப்பணைகள் பல கட்டினால் தேங்கும் நீர் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும், விவசாயமும் பெருகும். ஆனால் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள நில அமைப்பும், தேவையும் உள்ள இடங்களில் கட்டப்படாமல், அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக தேவையற்ற இடங்களுக்கு தடுப்பணை திட்டங்களை இடம் மாற்றுவதால் அது விவசாயிகளுக்கும் பயனில்லாமல், அந்த திட்டத்திற்கான நிதியும் வீணடிக்கப்படும் நிலை நிலவுகிறது.

    எனவே அமராவதி ஆற்றில் வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் நீரை மயில்ரங்கம் பகுதி பயன்பெறும் வகையில், அந்த பகுதியில் தடுப்பணை கட்டி தேக்குவதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பாக அமையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்படும் சமயங்களில், தற்போது உபரி நீரை மேடான பகுதியில் உள்ள குளங்களுக்கு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது போல், அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீரில் ஒரு பகுதியை மிகவும் வறண்ட பகுதியாக உள்ள வெள்ளகோவில் பகுதியில் அமைந்துள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டி கொண்டு வர வேண்டும் எனும் கோரிக்கையும் பல ஆண்டாக கிடப்பில் உள்ளது‌. ஆனால் அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலைக் கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டும் திட்டத்துக்கு ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை சார்பில் திட்ட செலவுகள் குறித்த கருத்துரு மட்டும் அரசுக்கு அனுப்பப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ் நிலையம் எதிரில் எஸ்கலேட்டர் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
    • ஆகஸ்டு மாதம் துவக்கத்தில் இயக்கத்துக்கு வரும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலைய முதல் பிளாட்பார்மில் இருந்து இரண்டாவது பிளாட்பார்ம் செல்ல 'லிப்ட்' வசதி உள்ளது. இரு இடங்களில் படிக்கட்டுகளில் ஏறியும் செல்ல முடியும். ெரயில் பயணிகள் வசதிக்காக, ரெயில்வே போலீஸ் நிலையம் எதிரில் எஸ்கலேட்டர் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    4ஆண்டுக்கு முன் பணி துவங்கினாலும், உபகரணங்கள் வந்து சேருவதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் எஸ்கலேட்டருக்கான நகரும் படிக்கட்டுகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் பிளாட்பார்மில் இருந்து எஸ்கலேட்டருக்கான இணைப்பு உருவாக்கிய பின், சோதனை ஒட்டம் மேற்கொள்ளப்படும். ஆகஸ்டு மாதம் துவக்கத்தில் இயக்கத்துக்கு வரும் என ெரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×