என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "end"
- ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.
- இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது.
வாழப்பாடி:
வாழப்பாடியில் பழு டைந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, கீழ்தளத்தில் பயணி கள் நிழற்குடை, பேருந்து தள மேடை வசதிகளும், மேல் தளத்தில் வணிக வளாகம், சிறு வியாபாரக் கடைகள் மற்றும் நடை மேடையுடன், ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடை பெற்று வந்த பேருந்து நிலைய கட்டுமானப்பணி கள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயி லில், டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகி யோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலை கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பேருந்து நிலை யத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள் ளது.
எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது. இது குறித்து வாழப்பாடி தாசில்தார் தலைமையில் கடந்த மார்ச் 10–ந்தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சிலைகளை வேறு இடத்தில் மாற்றுவது குறித்து இது வரை இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.இதனையடுத்து, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலை மையில், நேற்று மீண்டும் அனைத்துக்கட்சி நிர்வாகி கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தேசிய நெடுஞ்சா லைத்துறை, நெடுஞ்சா லைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் த.மா.கா. வி.எம்.சொக்கலிங்கம், அ.தி.மு.க. என்.சிவக்குமார், தி.மு.க. சேட்டு ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லைவாணன், காங்கிரஸ் எம்.கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால் திறப்பு விழா நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டியுள்ளதால், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெற்று, கடலுார் பிரதான சாலையோரத்தில் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்க கட்டடத்திற்கு அருகில், 3 சிலைகளையும் மாற்றி அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- தேவகோட்டையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக 48 இடங்களில் 140 கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய்-மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தேவ கோட்டையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றவாளி களை கண்காணிக்கவும் போலீசார் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்படி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து தேவகோட்டையில் 48 இட ங்களில் 140 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப் பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொ ள்ளை சம்பவம் நடந்தது. இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆலோசனைபடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலையில், வர்த்தக சங்க தலைவர் காஜா ஏற்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தற்போது நகரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வில்லை. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும், எனவே நகர் பகுதிகளில் முதல் கட்டமாக 41 இடங்களில் 140 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெ க்டர் சரவணன் கேட்டுக் கொண்டார். அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்