search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "songs"

    • வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார்.
    • இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் ஏராளமான பாடல்களை ரசிகர்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

    இருவரும் ஒரு அதிசயமான ராக பந்தம் என்று கூட கூறலாம். தமிழின் உச்சத்தை தொட வைரமுத்து ஓயாது இயக்கி கொண்டிருந்தார். ஏற்கனவே கவிதை எழுதுவதில் திறுமை வாய்ந்த வைரமுத்து சினிமாவின் மூலம் அதை வலுப்படுத்த முடிவு செய்தார். அப்போது தான் எழுதிய 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாராதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


    வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார். மெட்டுக்கு எழுதுவீர்களா? என்று கவிஞரிடம் இளையராஜா கேட்க, மெட்டை சொல்லுங்க முயற்சி செய்கிறேன் என்றார் வைரமுத்து. உடனே மெட்டை வாசிக்கப்பட்டது... வைரமுத்துவோ பல்லவியை சொல்லவா... பாடவா என்று கேட்டார். பாடுங்கள் என்றார் இளையராஜா அப்போது உருவானது தான் 'பொன்மாலை பொழுது'... இதை கேட்ட இளையராஜா வைரமுத்துவை கட்டியணைத்த இவர் சினிமாவில் பல யானைகளை சாய்ப்பார் என்று நம்பிக்கையோடு கூறியதாக பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

    அப்போது தொடங்கிய இவர்கள் இருவரின் சினிமா பயணம் தொட்ட படங்கள் மற்றும் பாடல்கள் எல்லா வெற்றி. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி எங்கும் இவர்கள் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

    1980களில் தொடங்கி தொடர்ந்து 7 ஆண்டுகள் இவர்கள் பயணம் எந்தவித மனக்கசப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்தது.


    இதையடுத்து பாடல் வரிகள் மூலம் அனைவரையும் கவர்ந்த வைரமுத்துவிற்கு சினிமாவில் பல்வேறு வாய்ப்புகள் வர தொடங்கியது. எப்போது ஒளிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வரும் வைரமுத்துவால் உரித்த நேரத்தில் சில பணிகளை செய்ய முடியாமல் போனது. இதுவே இளையராஜா, வைரமுத்துவின் மன கசப்பிற்கு முதல் காரணமாக அமைந்தது.

    சில பாடல் வரிகளில் இளைராஜா தலையிட்டு மாற்றம் செய்ய சொல்வது அந்த விரிசலிற்கு மேலும் வலு சேர்த்தது. பொது இடங்களில் நண்பர்களை சந்திக்கும் போதும் ஒர் மீது ஒரு குறைகூறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இப்படி சென்ற இடத்தில் எல்லாம் பிரச்சனை முற்றியுள்ளது. எப்போதும் வைரமுத்து ஒரு படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களையும் தானே எழுந்த வேண்டும் என்று ஆசைப்படுவார்.

    இந்த சூழ்நிலையில் தான் 'தாய்கொரு தாலாட்டு' என்ற படத்தில் வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருந்தார். அப்போது இளையராஜா கோர்ப்பின் போது மேலும் ஒரு பாடலை வாலியை வைத்து எழுதி வாங்கி இருந்தார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இன்னும் அதிகரித்தது. கடைசியா இவை அனைத்து ஒன்று சேர்ந்து இசைப்பாடும் தென்றல் என்ற படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது மோதலாக உருவாகிறது. 'எந்த கைக்குட்டையை யார் எடுத்தது' என்ற பாடல் வரி எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, அந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை நானே எழுதிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா. இதன் காரணமாக வைரமுத்து அங்கிருந்து கோபத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது.

    பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்திற்கு பிறகு வைரமுத்துவும் இளையராஜாவும் நிரந்தரமாக பிரிந்தனர்.


    தொடர்ந்து இன்னும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு, சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் சில பேர் சமாதானம் செய்தும் எந்த பயனும் இல்லாமல் போனது. இளையராஜாவை பிரிந்த நேரத்தில் வைரமுத்துவிற்கு பாடல் வாய்ப்பு குறைய தொடங்கியது.

    தான் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து பயணம் செய்ய இசையமைப்பாளர்கள் துணை தேவை என்பதை உணர்ந்த வைரமுத்து ஏராளமான இசையமைப்பாளர்களை தமிழில் திரைப்பட இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

    அப்படியாக வைரமுத்து அறிமுகம் செய்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

    ஏ.ஆர். ரஹ்மானும், வைரமுத்து இணைந்து பல்வேறு பாடல்களை உருவாக்கினர். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    1992ல் ஏஆர் ரஹ்மான் அறிமுகமானபோதும் இளையராஜா அவரது வளர்ச்சியை விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருமுறை ஏஆர் ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு இசைக்கருவியை இளையராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் சிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் இவர்களின் தொடர் வெற்றியால் இளையராஜாவிற்கு பாடல் வாய்ப்புகள் குறைய தொடங்கியதாக அப்போது கூறப்பட்டது. இதன் காரணமாக பிரபலங்கள் சிலர் இவர்களை இணைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.


    இந்நிலையில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவும் இருந்த இடைவெளி யுவன் சங்கர் ராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே இல்லை. யுவனுடன் இணைந்து பணியாற்றி அதற்கு தேசிய விருது பெற்று விட்டார் வைரமுத்து. பின்னர் யுவனுடன் இணைந்து மாமனிதன் படத்திற்கு பாடல் வரிகள் எழுத முடிவுசெய்த நிலையில் அதை இளையராஜா மறுத்திருக்கிறார். பின்னர் மாமனிதன் படத்திற்கு பா. விஜய் பாடல் எழுதினார்.

    இளையராஜாவை பிரிந்தது குறித்து வைரமுத்து ஒரு பாடல் வரியில் கூறியிருப்பதாவது:

    "மனைவியின் பிரிவுக்கு பிறகு அவள் புடவையை தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதல் உள்ள கணவனை போல, நினைவுகளோடு நான் மித்திரை கொள்கிறேன். திரையுலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான். மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னோடுதான். பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்." என்று அழகாக கூறியிருந்தார் வைரமுத்து.

    இந்நிலையில் சென்னையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.


    இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:

    எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

    வைரமுத்து - கங்கை அமரன் வார்த்தைப் போரால், இனி வரும் காலங்களில் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைய வாய்ப்பே இல்லை எனலாம்.

    • படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
    • கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு.

    செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    இந்நிலையில், படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுவுக்கு எதிரான பாடல் ஒன்று இன்று மாலை வெளியாகிறது.

    கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மரணத்திற்கு முன்பே

    மனிதனைப் புதைத்துவிடுகிறது

    மது

    ஒவ்வொரு மணி நேரத்திற்கும்

    16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

    44 முதல் 67 விழுக்காடு

    சாலை விபத்துகள்

    மதுவால் நேர்கின்றன

    20மில்லி ரத்தத்தில் கலந்தாலே

    பார்வையைப் பாதிக்கிறது மது

    30மில்லி கலந்தால்

    தசை தன் கட்டுப்பாட்டை

    இழந்துவிடுகிறது

    ஒருநாட்டின் மனிதவளம்

    தவணைமுறையில் சாகிறது

    ஒழுக்கக்கோடுகள் அழிந்து

    ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

    மதுவுக்கு எதிராக

    நான் எழுதிய ஒருபாடலை

    இன்று மாலை வெளியிடுகிறோம்

    இப்போதே உங்கள்

    கண்களுக்கும் காதுகளுக்கும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடந்தது.

    விழாவில் மண்ணின் இசை பாடல்கள், கவிச்சரம், நாட்டுப்புற பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, மருவரசி, சிவரஞ்சனி, கவிஞர் கண்ணையன், பத்மஜா, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மேலும் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், வேதாரண்யம் சங்க தலைவர் ரமேஷ் உட்பட கல்லூரி மாணவ- மாணவிகளும், பேராசிரியர்கள் பிரபாகரன், அர்ஜூனன், மாரிமுத்து, இளையராஜா, முத்துகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆவராணி ஆனந்தன் நடுவராக கொண்டு கல்லூரி மாணவிகளின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    பேராசிரியர் ராஜா வரவேற்றார்.

    எழுத்தாளர்கள் சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

    இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மகளிர் தின விழா பள்ளிச்செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

    மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், வச ந்தா,ரவீ ந்திரன் சந்திரசேகரன், சரண்யா, இலக்கி யா,வி ஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஓய்வு பெற்ற தலை மையா சிரியர் சித்தி ரவேல் உட்பட கல்விக்கு ழுவினரும் கலந்து கொண்டனர்.

    • பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி ஊர்வலம் வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி விடியற் காலை விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலம் வந்தனர்.

    பேரணியானது பஸ் நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.

    இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல்.

    மதுக்கூர்:

    தமிழகமெங்கும் மாற்றுத்திற னாளி–களுக்கான விழிப்புணர்வு முகாம் பல்வேறு வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதனை அடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாணவர்களின் மாற்றுத்திறனாளிக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

    இதனை அடுத்து விழிப்புணர் பேரணி, இணைவோம் மகிழ்வோம் என பல்வேறு வகையில் நடைபெற்று வந்தது.

    இதன்படி நேற்று 25-ந்தேதி மதுக்கூர் அருகே மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதன்படி பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இன்று இனிய முறையில் நடைபெற்றது.

    இந்த கலை நடன நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜமீலா அவர்கள் தலைமையேற்று கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வீரப்ப ராஜா, பிரகாஷ் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்கள் இருதயராஜ், புஷ்பா மற்றும் இயன் முறை மருத்துவர் பழனிவேல் ஆகியோர் இதற்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலும் விளையாட்டுப் போட்டிகள் சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது.

    • அரச மரத்தின் கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.
    • திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    குத்தாலம்:

    திருமந்திரத்தை இயற்றிய திருமூலருக்கு அவர் சமாதியடைந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் குருபூஜை விழா நடைபெற்றது.

    திருமூலர் ஞானசமாதி அடைந்த தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ளது.

    திருமூலர் சமாதி அடைந்த இடத்தில் இக்கோயிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமூலர் கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள படர்அரச மரத்தின்கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.

    இந்த 3000 பாடல்களே திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், திருமூலரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, பசுக்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில், 'அருள் அரசர்களும் அடியார்களும்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள அதனை திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களின் கண்காணிப்பாளர்கள், ஆதீன பள்ளிகளின் ஆசிரியர் பெற்றுக் கொண்டனர்.

    முன்னதாக, ஆரவாய் அண்ணல் அறக்கட்டளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர், சென்னை சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி அமைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.

    புதுச்சேரி அக்ஸி எழிலன் சிறப்புரையாற்றினார்.

    கோவில்பட்டி சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி பேராசிரியர் விமலா சுப்பிரமணியம் 'திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    • சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருள செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு நடந்தது.

    நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்ததைத் தொடந்து நேற்றிரவு சுப்பிரமணியருக்கு வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் கல்யாண உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    இதனைத் தொட.ர்ந்து சன்னிதியில் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் சுப்பிரமணியர் சுவாமியின் இருபக்கமும் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் மணக்கோலத்தில் எழுந்தருளச் செய்து, ஹோமங்கள் வளர்த்து, மூலிகைகள், தானியங்கள், பழம், பட்டு வஸ்திரம் முதலிய ஆகுதிகள் சமர்ப்பித்து, வேதபாராயணம் முதலிய மந்திரங்கள் பாடி, இரு மணமகள்களுக்கும் மங்கல நாண் பூட்டி சுப்பிரமணியர் சுவாமிக்கு திருமணம் செய்விக்கப்ட்டது. பின்னர் மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருளச் செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

    இத்திருமண வைபவத்தைக் கண்டு அருள்பெற்ற ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை விருந்துடன் கல்யாண சாப்பாடு போடப்பட்டது. ஏற்பாடுகளை ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

    ×