search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் அரசு கல்லூரியில் மகளிர் தினவிழா
    X

    அரசு கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் மாணவ-மாணவிகள் கொண்டார்.

    வேதாரண்யம் அரசு கல்லூரியில் மகளிர் தினவிழா

    • தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடந்தது.

    விழாவில் மண்ணின் இசை பாடல்கள், கவிச்சரம், நாட்டுப்புற பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, மருவரசி, சிவரஞ்சனி, கவிஞர் கண்ணையன், பத்மஜா, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மேலும் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், வேதாரண்யம் சங்க தலைவர் ரமேஷ் உட்பட கல்லூரி மாணவ- மாணவிகளும், பேராசிரியர்கள் பிரபாகரன், அர்ஜூனன், மாரிமுத்து, இளையராஜா, முத்துகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆவராணி ஆனந்தன் நடுவராக கொண்டு கல்லூரி மாணவிகளின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    பேராசிரியர் ராஜா வரவேற்றார்.

    எழுத்தாளர்கள் சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

    இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மகளிர் தின விழா பள்ளிச்செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

    மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், வச ந்தா,ரவீ ந்திரன் சந்திரசேகரன், சரண்யா, இலக்கி யா,வி ஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஓய்வு பெற்ற தலை மையா சிரியர் சித்தி ரவேல் உட்பட கல்விக்கு ழுவினரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×