search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பணிகள் மீண்டும் தொடக்கம்
    X
    கோப்புபடம். 

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பணிகள் மீண்டும் தொடக்கம்

    • போலீஸ் நிலையம் எதிரில் எஸ்கலேட்டர் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
    • ஆகஸ்டு மாதம் துவக்கத்தில் இயக்கத்துக்கு வரும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலைய முதல் பிளாட்பார்மில் இருந்து இரண்டாவது பிளாட்பார்ம் செல்ல 'லிப்ட்' வசதி உள்ளது. இரு இடங்களில் படிக்கட்டுகளில் ஏறியும் செல்ல முடியும். ெரயில் பயணிகள் வசதிக்காக, ரெயில்வே போலீஸ் நிலையம் எதிரில் எஸ்கலேட்டர் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    4ஆண்டுக்கு முன் பணி துவங்கினாலும், உபகரணங்கள் வந்து சேருவதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் எஸ்கலேட்டருக்கான நகரும் படிக்கட்டுகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் பிளாட்பார்மில் இருந்து எஸ்கலேட்டருக்கான இணைப்பு உருவாக்கிய பின், சோதனை ஒட்டம் மேற்கொள்ளப்படும். ஆகஸ்டு மாதம் துவக்கத்தில் இயக்கத்துக்கு வரும் என ெரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×