என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில்  250 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடக்கம்
    X

    கோப்புபடம். 

    உடுமலையில் 250 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடக்கம்

    • உடுமலை அஞ்சல் உட்கோட்டம் மற்றும் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடந்தது.
    • செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உடுமலை:

    தேசிய அஞ்சல் வாரம் அக்டோபர் 9 முதல் 13-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, நிதி வலுவூட்டல் நாள் உடுமலை அஞ்சல் உட்கோட்டம் மற்றும் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடந்தது.

    இதில் 250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், ஜெயசீலன், உட் கோட்ட ஆய்வாளர் வெங்கட், இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் ரவி ஆனந்த், செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×