search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RECONSTRUCTION WORKS"

    • மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
    • வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதான கால்வாய்களில் ரூ.28.80 கோடியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது
    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் புனர மைப்பு பணிகள் மற்றும் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயரச்செய்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், துரிதமாக பல்வேறு நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கண்மாய்கள் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மானாமதுரை , திருப்புவனம் வட்டங்களில் பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் வைகை யாற்றின் குறுக்கே விரகனூர் மதகணையில் இருந்து பிரியும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் மொத்தம் ரூ.28.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இதன்மூலம் மானா மதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் உள்ள 40,743.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன் 82 கண்மாய்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பகுதியைச் சுற்றியுள்ள 3,180 ஏக்கர் இடைவெளி நிலங்களும் பயன்பெறும்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மானாமதுரை கிராமம் கீழப்பசலை மற்றும் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை சிவகங்கை சாலை இணைப்பு பாலத்திற்கு மேல்புறத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு ரூ.16.86 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த அணைக்கட்டின் மூலம் கீழப்பசலை மேலப்பசலை ஆதனூர் மற்றும் சங்கமங்கலம் ஆகிய 4 கண்மாய்கள் வழியாக 461.82 எக்டேர் (1140.70 ஏக்கர்) பாசன நிலங்களும், கால்பிரிவு மற்றும் செய்களத்தூர் கிராமங்களில் உள்ள 27 விவசாய கிணறுகள் வழியாக 85.75 எக்டேர் (211.80 ஏக்கர்) பாசன நிலங்களும் பயன்பெறு கின்றன. மொத்தமாக 547.57 எக்டேர் (1352.50 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.

    இந்த அணைக்கட்டு மூலம் 9.36 மி.க.அடி (எம்.சி.எப்.டி) தண்ணீர் தேக்க இயலும். இதன் பொருட்டு அணைக்கட்டின் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இதனால் பாசன வசதி பெற்று விவசாயிகளின் பொருளாதார வாழ்க்கை தரம் மேம்படுவதோடு மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ள காலங்களில் வைகை யாற்றில் இருந்து உபரிவெள்ள நீரை மேலப்பசலை கண்மாய் வழியாக நாட்டார் கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 16 கண்மாய்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 கண்மாய்களுக்கும் ராமநா தபுரம் மாவட்டத்திலுள்ள 4 கண்மாய்களுக்கு இந்த அணைக்கட்டு மூலம் திருப்பிவிட இயலும்.

    இந்த 10 கண்மாய்கள் மூலம் சுமார் 614.30 எக்டேர் (1517.32 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், இளம்பொறியாளர் போஸ், உதவிப்பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
    • புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு, காரைக்கால் மட்டுமில்லாது, அண்டை மாவட்டமான, நாகை,திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான நோயாளிகள், தினசரி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, உயர்தர சிகிச்சை, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஜிம்பர் சார்பில், அண்மையில், சுமார் ரூ.30 கோடிக்கு மேல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், தொடரும் அவலமாக, கடந்த சில வாரமாக, நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், வெறும் தரையிலும், சிலர் பாய், போர்வை உள்ளிட்ட வசதிகளோடு படுத்துறங்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இதில், அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட நோயாளிகளும் இருப்பது வேதனையானது. இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய ஆஸ்பத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

    அதேபோல், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதி பெற்று, புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களின் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குறைந்த செலவில், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி. ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத ந்தால், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை க்காக வந்து மரணம் அடையும் நோயாளிகளின் எண்ணி க்கை குறையும். எனவே, முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை செய்துதர முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்வரவேண்டும், என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
    • ரூ.79.40 லட்சத்தில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரூ.79.40 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

    சமத்துவபுரத்தல் உள்ள வீடுகள், பூங்கா, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவை சேதமடைந்த நிலையில் இருந்தன. எனவே வீடுகள் உட்பட சமத்துவபுர வளாகம் முழுவதையும் சீரமைத்து தர வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சமத்துவ புரத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.79.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுது.

    இந்த நிதியில் சமத்துவபு ரத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா மேம்பாடு மற்றும் சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவறறின் கட்டிடங்களில் உள்ள சேதங்களைச் சீரைமைத்தல், வீடுகள் உள்ள பழுழக ளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் தீவிராக மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. 

    ×