search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்கும் பணிகள்
    X

    பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்கும் பணிகள்

    • பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
    • ரூ.79.40 லட்சத்தில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரூ.79.40 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

    சமத்துவபுரத்தல் உள்ள வீடுகள், பூங்கா, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவை சேதமடைந்த நிலையில் இருந்தன. எனவே வீடுகள் உட்பட சமத்துவபுர வளாகம் முழுவதையும் சீரமைத்து தர வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சமத்துவ புரத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.79.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுது.

    இந்த நிதியில் சமத்துவபு ரத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா மேம்பாடு மற்றும் சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவறறின் கட்டிடங்களில் உள்ள சேதங்களைச் சீரைமைத்தல், வீடுகள் உள்ள பழுழக ளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் தீவிராக மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×