search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patients suffering"

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
    • புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு, காரைக்கால் மட்டுமில்லாது, அண்டை மாவட்டமான, நாகை,திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான நோயாளிகள், தினசரி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, உயர்தர சிகிச்சை, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஜிம்பர் சார்பில், அண்மையில், சுமார் ரூ.30 கோடிக்கு மேல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், தொடரும் அவலமாக, கடந்த சில வாரமாக, நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், வெறும் தரையிலும், சிலர் பாய், போர்வை உள்ளிட்ட வசதிகளோடு படுத்துறங்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இதில், அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட நோயாளிகளும் இருப்பது வேதனையானது. இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய ஆஸ்பத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

    அதேபோல், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதி பெற்று, புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களின் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குறைந்த செலவில், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி. ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத ந்தால், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை க்காக வந்து மரணம் அடையும் நோயாளிகளின் எண்ணி க்கை குறையும். எனவே, முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை செய்துதர முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்வரவேண்டும், என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்ததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். #DoctorsStrike

    திண்டுக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு டாக்டர்கள், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    எங்கள் கோரிக்கையை அரசுக்கு பலமுறை எடுத்துகூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்க வில்லை. இதனால் திறனாய்வு கூட்டங்களை புறக்கணிப்பது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை நிறுத்தியது, சிறப்பு முகாம்களை ரத்து செய்தது போன்ற பல்வேறு மக்கள் நேரடி பாதிப்பு இல்லாத போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.

    எனவே இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 250 டாக்டர்கள் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்பிறகும் அரசு அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும் 8-ந் தேதி முதல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை பெறுவது, 10-ந் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், 12-ந் தேதி நோயாளிகளின் சிகிச்சைகளை நிறுத்துவது, 13-ந் தேதி அடையாள வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். அப்போதும் தீர்வு கிடைக்க வில்லை எனில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

    அரசு ஆஸ்பத்திரியில் தற்போது மழைக்கால நோய்கள் தாக்கப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் அரசு டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பயிற்சி டாக்டர்களை கொண்டு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். #DoctorsStrike

    ×