என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் ஜமாபந்தி
- பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் விசாரணை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தச்சம்பட்டு பகுதியில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாரதி உட்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஜமாபந்தியில் காட்டாம்பூண்டி, சின்னகல்லப்பாடி, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, பழையனூர், கண்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை மேற்கொண்டார். மேலும் கிராமங்களின் வருவாய் ஆவணங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தினார்.
Next Story






