என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களை"

    • பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது.
    • முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் இன்று விருத்தாசலம் பைபாஸ் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    தமிழ்நாடு போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது. விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களில் இருந்து 31 பள்ளிகளைச் சேர்ந்த 220 பள்ளி வாகனங்கள் சோதனை தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி, சி.சி.டி.வி. உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

    மேலும், பள்ளி வாகன டிரைவர்கள் வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கும்போதும் ஏறும் போதும் சரியாக கவனித்து வாகனங்களை இயக்குமாறும் அறிவுரை களை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளும் விதத்தில் முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் பால முருகன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
    நாமக்கல்:

    கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம்  பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கு முன்பாக அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. 

    இதை தொடர்ந்து , நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வி வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. 

    இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு வாகனத்தில் பிரேக் சரியாக உள்ளதா? பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? , வாகன படிக்கட்டுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் இயக்கக்கூடாது. மது அருந்த கூடாது என அறிவுறுத்தப்பட்டன.

     மேலும், தீயணைப்புத் துறையினா் மூலம் தீத்தடுப்பு மற்றும் முதலுதவி தொடா்பான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. 

     ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், டிஎஸ்பி சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×