search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judge wife"

    அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் அருகே கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிபதியின் மனைவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

    பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் துருவ் (18) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.



    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மகிபால் என்ற பாதுகாவலரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack

    அரியானாவில் நீதிபதியின் மனைவி, மகன் மீது இன்று துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் உள்ளது. இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட்டில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

    அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள சதார் போலீசார் தப்பியோட முயன்ற மகிபாலை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 
    இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack
    சூலூரில் நீதிபதி மனைவியிடம் 9 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி.

    இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு செல்வபாண்டி தனது மனைவி மகேஷ்வரியுடன்( 40) கடைக்கு சென்றுவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    சூலூர் பெரிய குளத்தின் அருகே வரும் போது திடீரென்று பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மகேஸ்வரி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை.

    சம்பவ இடத்தின் அருகே உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    சூலூர் பகுதியில் தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவங்களை தடுக்கக்கோரி சமீபத்தில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர் அனைத்துகட்சி சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×