search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telangana rashtra samithi"

    தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரானார்.

    தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.



    இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.  முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது.

    அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.



    இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். 

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 1.30 மணியளவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவித்தனர்.

    முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசர் ஈடுபட்டு வருகின்றனர். #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம் எல் ஏக்களின் கூட்டம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, சந்திரசேகர ராவ் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது. #TelanganaElections #ChandrashekharRao
    சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட தெரிவித்தார். #Telangana #ChandrashekarRao #RahulGandhi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சிக்காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.

    அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை இன்று வழங்கினார்.

    இந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் நரசிம்மன், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 

    மேலும், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் இன்று  வெளியிட்டார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினருக்கு அடிமையாக இருக்க வேண்டாம் என தெலுங்கானா மக்களுக்கு முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    2014ம் ஆண்டுக்கு முன் தெலுங்கானாவில் குண்டு வெடிப்புகள், மின்சார பற்றாக்குறை, சமுதாய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன.

    தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பதிலை  அளிப்பார்கள். 

    நாட்டிலேயே மிக பெரிய கோமாளியாக இருப்பவர் ராகுல் காந்தி. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த சம்பவமே இதை விளக்குவதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியினருக்கு அடிமையாக இருக்க வேண்டாம்.

    நாங்கள் சட்டசபை தேர்தலை தனியாகவே சந்திக்க முடிவு செய்துள்ளோம். மஜ்லிஸ் இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியுடன் எப்போதும் தோழமையுடன் இருப்போம்.

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 100 சதவீதம் மதசார்பற்ற கட்சி. அப்படி இருக்கையில் பாஜகவுடன் எப்படி நாங்கள் இணைய முடியும்? என கேள்வி எழுப்பினார். #Telangana #ChandrashekarRao #RahulGandhi
    ×