search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrashekhar rao"

    சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். #ChandrashekharRao
    ஐதராபாத்:

    இந்தியாவில் உள்ள முதல்-மந்திரிகளில் சிறப்பாக செயல்படுபவர் யார் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

    அந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திர சேகரராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயல்படுவதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 68.3 சதவீத மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

    இமாச்சலபிரதேச முதல்- மந்திரி ஜெய்ராம் தாகூர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 3-வது இடத்துக்கு வந்துள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்தில் உள்ளார்.



    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த முறை நடந்த கருத்து கணிப்பில் முதன்மை இடங்களில் இருந்தார். இந்த தடவை அவர் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்-மந்திரி ராவத்துக்கு அவர்களது மாநிலங்களில் எதிர்பார்த்த ஆதரவு இல்லை. #ChandrashekharRao
    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள சந்திரசேகர ராவ், நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமிதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.



    இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்கானா  ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக  சந்திரசேகர ராவ் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த கூட்டத்தின்போது, பதவியேற்பு விழா தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். #TelanganaElections #ChandrashekharRao

    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

    மதிய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தாண்டி, 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியாகிவிட்டது.



    இந்நிலையில், காஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கத்தில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சந்திரசேகர ராவ், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டி 2ம் இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் அகுல விஜயா நான்காம் இடத்திற்கு பின்தங்கினார். #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட தெரிவித்தார். #Telangana #ChandrashekarRao #RahulGandhi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சிக்காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.

    அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை இன்று வழங்கினார்.

    இந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் நரசிம்மன், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 

    மேலும், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் இன்று  வெளியிட்டார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினருக்கு அடிமையாக இருக்க வேண்டாம் என தெலுங்கானா மக்களுக்கு முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    2014ம் ஆண்டுக்கு முன் தெலுங்கானாவில் குண்டு வெடிப்புகள், மின்சார பற்றாக்குறை, சமுதாய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன.

    தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பதிலை  அளிப்பார்கள். 

    நாட்டிலேயே மிக பெரிய கோமாளியாக இருப்பவர் ராகுல் காந்தி. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த சம்பவமே இதை விளக்குவதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியினருக்கு அடிமையாக இருக்க வேண்டாம்.

    நாங்கள் சட்டசபை தேர்தலை தனியாகவே சந்திக்க முடிவு செய்துள்ளோம். மஜ்லிஸ் இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியுடன் எப்போதும் தோழமையுடன் இருப்போம்.

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 100 சதவீதம் மதசார்பற்ற கட்சி. அப்படி இருக்கையில் பாஜகவுடன் எப்படி நாங்கள் இணைய முடியும்? என கேள்வி எழுப்பினார். #Telangana #ChandrashekarRao #RahulGandhi
    ×