search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trs"

    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலம் சென்றார்.
    • அங்கு ரேஷன் கடையை ஆய்வு செய்த அவர், ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    ஐதராபாத்:

    தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.

    அப்போது மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும்போது, ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் கியாஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். அதில் கியாஸ் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

    இதுதொடர்பான வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் தலைமையிலான குழுவினர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசினர். #TRS #YSRCong #FederalFront
    ஐதராபாத்:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை சந்தித்து பேசினார். 

    இதன் தொடர்ச்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழுவையும் அமைத்தார். அதன்படி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், இன்று ஐதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்பின்போது மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கூட்டணி அமைப்பதற்கு ஆதரவு தரும்படி ஜெகன் மோகன் ரெட்டியிடம் கேட்டுக்கொண்டனர். #TRS #YSRCong #FederalFront
    மத்தியில் பாஜக அரசையும் தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசையும் தேர்தலில் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று ராகுல் காந்தி பேசினார். #TelenganaElections #Rahul
    கோடங்கல்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில் விகாராபாத் மாவட்டம் கோடங்கல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே வேற்றுமையை உருவாக்கி உள்ளார். அதையே தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் செய்துள்ளார். மத்திய பாஜக அரசாங்கமும் சரி, தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி அரசாங்கமும் சரி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.



    2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கத்தை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடக்க உள்ள தெலுங்கானா தேர்தலில் டிஆர்எஸ் அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சிக்கு வரும்.

    காங்கிரஸ் ஆட்சியின்போது தெலுங்கானா பகுதியில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த திட்டங்களை டிஆர்எஸ் அரசாங்கம் மறுவடிவமைத்து பெயர்களையும் மாற்றியது. அத்துடன் கமிஷன் பெறுவதற்காக செலவையும் அதிகரித்தது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கி, மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும். 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் பென்சன் 2000 ரூபாய் வழங்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #TelenganaElections #Rahul
    தெலுங்கானா மாநிலத்தில் இலவசமாக முடித்திருத்தம் செய்யும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள், தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். #Telangana #TRS
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்தந்த கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், மக்களை ஈர்ப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது.

    அதன்படி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தீவிர தொண்டர்களான முடித்திருத்தம் செய்யும் தொழிலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்கிறார்களாம். அதற்கு பதிலாக வரும் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு வாக்களிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடப்படுகிறது.

    தேர்தல் நெருங்கும் சமயங்களில், இலவசம் இலவசம் என கட்சிகளின் அறிவிப்பு பழகிய ஒன்றாக இருந்தாலும், இப்போது இதுபோன்ற தீவிர தொண்டர்களின் நடவடிக்கைகள் சற்று சுவாரஸ்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. #Telangana #TRS
    ×