search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YogiAdityanath"

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியினர் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #YogiAdityanath
    பரேலி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.  கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன.



    காங்கிரஸ்,  முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக்  கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
    உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில அரசின் தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும் என யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தலைநகர் லக்னோ நகரில் நடைபெற்ற விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கவர்னர் ராம்நாயக் உள்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-



    உத்தரப்பிரதேசம் மாநிலத்துடன் வாஜ்பாய் பலமான பிணைப்பை வைத்திருந்தார். இம்மாநிலத்தில் பல்ராம்பூரில் இருந்து தனது பொதுவாழ்வை தொடங்கிய அவர், லக்னோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்துள்ளார்.

    தீன்தயாள் உபாத்யாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரிடமிருந்து அரசியல் பாடங்களை கற்ற வாஜ்பாய் நல்லாட்சி என்று சொல்லுக்கு அஸ்திவாரமாக விளங்கினார். அதனால்தான் இந்த மாநில அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளோம். 

    அவரது நினைவுகளையும் புகழையும் நினைவுகூரும் வகையில் அரசு தலைமை செயலகத்தில் (லோக் பவன்) வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
    பாரதீய ஜனதா ஏற்கனவே மக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போது கடவுளை கூட அவர்கள் விட்டு வைக்க வில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். #mayawati #yogiadityanath

    புதுடெல்லி:

    ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனுமான், காடுகளில் வசிக்கும் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு தலித் என்று கூறி இருந்தார்.

    இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    டெல்லியில் அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்ச்சியில் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாரதீய ஜனதா ஏற்கனவே மக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போது கடவுளை கூட அவர்கள் விட்டு வைக்க வில்லை.

    கடவுள்களை ஜாதி ரீதி யாக பிரிக்க பார்க்கிறார்கள். அதனால் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனுமானை தலித் என்று கூறி இருக்கிறார்.


    அப்படியானால் அனுமான் கோவில்களில தலித்துகளை பூசாரியாக நியமிக்க வேண்டும் என்று மக்கள் அவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    பாரதீய ஜனதா ஆட்சியில் விவசாயிகள் கடும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    ஆனால், அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.

    அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அடிப்படை பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி விட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு மாயாவதி பேசினார். #mayawati #yogiadityanath

    தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும் என உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #KarimNagar #Karipuram #BJP #YogiAdityanath
    கரீம்நகர்:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பா.ஜனதா கட்சி பிரசாரத்தில் களம் இறக்கியது.

    நேற்று அவர் கரீம் நகரில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய அவர், ‘‘மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும்’’ என கூறினார்.

    யோகி ஆதித்யநாத், கடந்த 2-ந் தேதி ஐதராபாத்தில் பிரசாரம் செய்தபோது, ‘‘ஐதராபாத்தின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பா.ஜனதா கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுங்கள்’’ என்று அழைப்பு விடுத்தது நினைவுகூரத்தக்கது.

    தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் டி.ராஜாசிங் லோத், பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் அந்த மாநிலத்தில் உள்ள பல நகரங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்களைக் கொண்டு மாற்றப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது. #KarimNagar #Karipuram #BJP #YogiAdityanath
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்காமல் பா.ஜ.க.வினால் 2019-ல் ஆட்சிக்கு வர முடியாது என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சாதுக்கள் குழு முறையிட்டுள்ளனர். #RamTemple #YogiAdityanath
    லக்னோ :

    உ.பி.யில் ராமர் கோவில் கட்டும் பணியில் காலம் தாழ்த்தப்பட்டு வருவது, சாதுக்கள் மற்றும் துறவிகள் மத்தியில் சீற்றத்தை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில், சாது திகம்பர அக்ஹர மஹந்த் சுரேஷ் தாஸ் தலைமையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் குழு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்து பேசினர். 

    முதல்வருடனான சந்திப்புக்கு முன்பாக பேசிய சாதுக்கள், அயோத்தியில் ராமர் கட்டும் பணி மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் பாரதிய ஜனதா அரசு, ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்காமல் மீண்டும் 2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வர முடியாது என தெரிவித்தனர்.

    முதல்வர் யோகி மற்றும் சாதுக்கள் இடையிலான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ‘அயோத்திக்கு வருகை தர பிரதமர் மோடிக்கு பல முறை கோரிக்கை வைத்தும், அயோத்திக்கு வராமல் தவிர்த்து வரும் மோடி விரைவில் அயோத்திக்கு வருகை தர வேண்டும். பைசாபாத் வழியாக பாயும் காக்ரா நதியின் பெயரை சரயு நதி என மாற்ற வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் சாதுக்கள் முன்வைத்துள்ளனர்.

    சாதுக்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், ராமர் கோவில் கட்டுமான பணியை விரைவில் தொடங்க உள்ளதாக உறுதி அளித்திருக்கிறார். #RamTemple #YogiAdityanath 
    உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #yogiadityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்காக கஸ்தூரிபா காந்தி பள்ளியில் உள்ள மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், சில பிரச்சனை காரணமாக ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் இறக்கப்படாமல், அதற்கு 1 கி.மீ. முன்பாக உள்ள நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நலமுடன் இருப்பதாகும், திட்டப்படி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் பாரகுலி கிராமத்தில் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #yogiadityanath
    ×