என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cow smuggling"

    • அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
    • தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சிக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையில் கருத்து மோதல் வலுத்துள்ளது.

    சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கன்னோஜில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமணத்தை பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பாஜக துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அவர்கள் (பாஜக) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள். 

    ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் இங்கு ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக தங்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்ட வாசனை திரவிய பூங்காயும், தற்போது பாஜக அரசால் அதிகளவில் கட்டப்பட்டுவரும் பசுத்தொழுவங்களையும் ஒப்பிட்டு அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

     

    இந்நிலையில் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் இதற்கு பதிலடி கொடுத்தார்.

    அவர் கூறியதாவது, சமாஜ்வாதியினர் பசுவின் சாணம் நாற்றமடிப்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் பசுவதை செய்வோருடன் அவர்கள் பசுக்களை கொடுத்து வந்தனர்.

    பசுக்கடத்தல், பசுவதை செய்வோருக்கும் சமாஜ்வாதியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் பசுவதை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்ததால் தற்போது சமாஜ்வாதியினர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.

    அவர்களுக்கு பசுவின் சாணம் நாற்றமடிகிறது. ஆனால் தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் கோமாதாவுக்கு சேவை செய்வதை அவர்களின் தலைவர் (அகிலேஷ் யாதவ்) நாற்றமாக நினைக்கிறார் என்று தெரிவித்தார்.

    • ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




     

    ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள அம்ரோரா கிராமத்திற்கு அருகே, சரஸ்வதி ராம் என்ற அந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் தனது கால்நடைகளை வண்டியில் ஏற்றி அருகில் உள்ள பன்ஷிதர் நகர் என்ற சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர்ம், முதியவரை மறித்து, மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரது ஆடைகளைக் களைந்து இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சிறிதுதூரத்தில் கட்டை அவிழ்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மூவரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

    • பசுவின் கொழுப்பு , தோல் மற்றும் எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
    • பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை சட்ட விரோதமாக இறைச்சிக்காக வளர்த்ததாக கூறி 11 இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண்டலாவில் உள்ள பழங்குடியினப் பகுதியான பைன்வாகியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளில் சட்டவிரோதமாக சுமார் 150 பசுக்கள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுள்ளது.

     

    இதை அறிந்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அந்த வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டிறைச்சி கண்டெடுக்கபட்டது. மேலும் பசுவின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என்று உறுதி செய்யப்பட்டதாலும் 11 பேரின் வீடுகளும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாலும் அவை இடித்து அகற்றப்பட்டன.

     

     

     

    மேலும் அங்கிருந்த பசுக்களை மீட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்து ஒருவரை கைது செய்த நிலையில் மற்ற 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் இஸ்லாமியர்கள் என்றும் பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  மத்தியப் பிரதேசத்தில் பசுக்களை கடத்தி இறைச்சிக்காக வதைக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
    • அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு.

    பசு கடத்தலில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ள போலீஸுக்கு உத்தரவிட உள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்தில் கால்நடை கடத்தல் மற்றும் பசு வதை அதிகரித்து வருவதைத் தடுக்க, கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கண்டதும் சுடும் உத்தரவை பிறப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என மீன்வளத்  துறை அமைச்சர் மங்கலா சுப்ப வைத்யா தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஹொன்னாவர் அருகே கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வைத்யா நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது, பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. பசு கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்வாகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பசுக்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    நாம் தினமும் பசுவின் பால் குடிக்கிறோம். அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு. பசு கடத்தல் மற்றும் வதை தொடர்ந்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பார்த்த இடத்தில் சுட்டுக் தள்ள உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    ×