என் மலர்
நீங்கள் தேடியது "Two wheeler"
- பைக்கின் பின் சீட்டில் உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
- ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமில்லாமல் பின்னாடி உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
பின்னாடி உட்காருபவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் தன்னிசையாக அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், பெங்களூரு நகரில் போக்குவரத்து அபராதத்தில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தால் தலையை மூடிய இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.
- ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களின் இந்த புதிய விதி சேர்க்கப்பட உள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த விதி நடைமுறைக்கு வரும். ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது இதன் நோக்கம்.
வழங்கப்படும் ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.
ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல், 50 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் அல்லது 50 கி.மீ/மணிக்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் உட்பட அனைத்து புதிய L2 வகை இருசக்கர வாகனங்களுக்கும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ABS திடீர் பிரேக்கிங்கின் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சறுக்குவதைத் தடுக்கும்.
இந்த முன்மொழியப்பட்ட விதிகள் குறித்து தற்போது பொதுமக்கள் கருத்துக்கள் வரவேரிக்கப்டுகின்றன. பொதுமக்கள் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
- அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கில் இருந்து திடீரென புகை கிளம்பியது.
இதைப் பார்த்த பைக்கை ஓட்டி வந்த நபர் சுதாரித்துக்கொண்டு, உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு தூரமாக சென்றார். அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, வாகனத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிகழ்வால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக நடவடிக்கை.
- தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தகவல்.
வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பொருந்தும், இதன்மூலம் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- உலகளவில் 37 ஆலைகளிலிருந்து 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.
- 50 கோடியாவது வாகனமாக 110cc ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டது.
ஹோண்டா மோட்டார் நிறுவனம் 1949ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களின் உலகளாவிய உற்பத்தியில் 50 கோடி (500 மில்லியன்) யூனிட்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஹோண்டா நிறுவனம், உலகளவில் 23 நாடுகளில் உள்ள 37 ஆலைகளிலிருந்து 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இந்த மைல்கல் 2025 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில் உள்ள வித்தலாபூர் ஆலையில் இந்த 50 கோடியாவது வாகனமாக 110cc ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சாதனைக்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது.
இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) 7 கோடி (70 மில்லியன்) யூனிட்களை உற்பத்தி செய்து, உலகளவில் ஹோண்டாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக விளங்குகிறது.
குஜராத்தில் உள்ள வித்தலாபூர் ஆலை உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி மையமாகவும், 2027ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 26.1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ஹோண்டா இருசக்கர வாகன ஆலையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஹோண்டா ரூ.920 கோடி முதலீடு செய்து 4வது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இது கூடுதலாக 6.5 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும்.
இந்தியாவில் 2001ம் ஆண்டு ஆக்டிவா ஸ்கூட்டருடன் தனது பயணத்தைத் தொடங்கிய ஹோண்டா, 6 கோடி உள்நாட்டு விற்பனையை எட்டியுள்ளது.
இந்த சாதனை, இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டாவின் ஆதிக்கத்தையும், உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது.
- ஜெயச்சந்திரன் தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன். இவர் திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்இருசக்கர வாகனம் நிறுவனம் எதிரே தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாரிடம் ஜெயச்சந்திரன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துமர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே தச்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.அவரது மனைவி பெரியம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு தனது காட்டுக் கொட்டையின் முன்பு படுத்திருந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மீது மோதி சென்ற இருசக்கரவாகனம் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர்சுப்பிரமணியன். இவர் மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅர சுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப் பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.
மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விக்னேஷ் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- இருசக்கர வாகனத்தை திருடியதாக மாரி என்ற மாரியப்பன் கைது செய்யப்பட்டார்
நெல்லை:
முக்கூடல், பூவையா தெருவை சேர்ந்தவர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 11-ந் தேதி முத்து விக்னேஷ் வீட்டிற்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முக்கூடல், பெரிய வீதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி இருந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து முத்து விக்னேஷ் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படை யில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக பெருமாள் விசாரணை நடத்தி இருசக்கர வாக னத்தை திருடியதாக சிங்கம்பாறையை சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (20) என்பவவரை கைது செய்தார். அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
- பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகன் ஞானப்பிரகாசம் (வயது 30).இவர் சம்பவத்த ன்று பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது அவ ரது மொபட்டை காணவி ல்லை.
இது குறித்து பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.
- துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.
என்னங்க... பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா?
"ஏய்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே...
அப்படி இல்லீங்க... காலம் போகும் போக்கு சரியில்லை. இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்களை தினமும் செய்திதாள்களில் படிக்கிறேன். அதான் பயமா இருக்கு! எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் துரோகம் செஞ்சிடாதீங்க...
அட... என்ன நீ... உனக்கு நான் துரோகம் பண்ணுவேனா? என்னை நம்பு. உன் மீது சத்தியமா சொல்கிறேன். எந்த பெண்ணையும் நான் பைக்கில் ஏற்றி செல்லவில்லை என்று மனைவியை சமாளிப்பதற்குள் ஒரு வழியாகிவிடும்.
ஆனாலும் முழு திருப்தி அடையாமல் லேசான சந்தேகத்துடன் 'அப்படி, ஏதாவது தப்பு செஞ்சீங்க... நான் பொம்பளையா இருக்க மாட்டேன்...' என்று மனைவி எச்சரிப்பதை கேட்டு 'அப்பாடா... ஒரு வழியா நம்ப வைத்து சமாளித்து விட்டோம்' என்று கணவர் ஆறுதல் அடைந்த காலம் உண்டு.
கணவன்மாரே உஷார். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உங்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் உங்கள் மனைவியிடமே போட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கு கேரளாவில் நடந்திருக்கும் சம்பவமே சாட்சி.
கேரள மாநிலம் இடுக்கியை பூர்வீகமாக கொண்டவர் 32 வயது வாலிபர் பிரசன்னா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளார்கள். தற்போது இந்த தம்பதியினர் திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்கள்.
பிரசன்னா ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தினமும் டூ வீலரில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருகிறார். அவருடைய போதாத நேரம் இப்படி சிக்குவோம் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவேமாட்டார்.
கடந்த மாதம் 25-ந் தேதி கடையில் இருந்து திரும்பும்போது தனது பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.
கேரளாவில் முக்கிய இடங்கள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதி நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை அது படம்பிடித்து அனுப்பிவிடும். அபராத தொகையும் எவ்வளவு என்பது வீட்டுக்கே சென்றுவிடும்.
ஒவ்வொருவரையும் நிறுத்தி அபராதம் விதிக்கும் பெரிய தலைவலி கேரள போக்குவரத்து போலீசுக்கு இல்லை. சம்பவத்தன்று பெண்ணுடன் ஊர் சுற்றிய பிரசன்னா ஜாலி மூடில் இருந்ததால் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல மறந்து போனார்.
சாலையில் சென்றபோது இதை படம் பிடித்து இருக்கிறது கேமிரா. துரதிருஷ்டம் என்ன வென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.
எனவே கேமிரா பிடித்த போட்டோவை வண்டி உரிமையாளரான பிரசன்னாவின் மனைவியின் செல்போனுக்கே அனுப்பி வைத்துவிட்டது. அபராத தொகையை பற்றி பிரசன்னாவின் மனைவி கவலைப்படவில்லை. அவருக்கு பின்னால் 'ஈ' என்று இளித்தபடி ஒரு பெண் தோளில் கைபோட்டபடி இருக்கிறாளே அவள் யார்? என்பதுதான் ஆத்திரத்தில் கொந்தளிக்க வைத்தது.
வரட்டும்... என்று காத்திருந்தவர் அழைப்பு மணி ஒலித்ததும் கணவர்தான் வருகிறார் என்பதை அறிந்து கதவை திறந்தார். மனைவி வழக்கம் போல் இல்லையே சேலையை வரிந்து கட்டிக் கொண்டு பத்திரகாளியாட்டம் தெரியுறாளே... என்னவென்று தெரியவில்லையே என்று மனதுக்குள் ஒருவிதமான கலக்கத்துடனேயே வீட்டுக்குள் சென்ற பிரசன்னா வேலை களைப்பில் நாற்காலியில் அமர்ந்தார்.
வழக்கமாக வீடு திரும்பியதும் சிரித்து கொண்டே வரவேற்று ஆவிபறக்க கொண்டு தரும் காபி களைப்பை நீக்கிவிடும். ஆனால் இன்று முகத்திலும் சிரிப்பை காணோமே என்று யோசித்து கொண்டிருந்தபோது சமையலறையில் பாத்திரங்கள் விழுந்து உடைவது போல் பயங்கர சத்தம் கேட்டது.
ஆஹா... ஏதோ வில்லங்கம் வரப்போகுது என்பதை பிரசன்னாவும் யூகித்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மனைவி நேராக பிரசன்னாவின் அருகில் போய் நின்று கொண்டு "யாருய்யா.. அந்த பெண்" என்று நேராகவே கேள்வியை போட்டார்.
பெண்ணா... நீ என்ன கேட்கிறாய்? என்று எதுவும் புரியாதது போல் தவித்த பிரசன்னாவிடம் "சமாளிக்காதேய்யா... அதான் உன் மூஞ்சியே சொல்லுதே பைக்கில் ஒருத்தியை ஏற்றிக் கொண்டு ஊர் சுத்துறியே அந்த பெண் யார்" என்று கேட்டேன் என்றார்.
"ஏய்... நீ என்ன சொல்றே... பைக்கில் பெண்ணா... என்ன கனவு ஏதாச்சும் கண்டியா...? ஆமாய்யா... கனவு வேற காண வேண்டுமா? உன் லட்சணம் தான் ஊருக்கே தெரிந்து இருக்கிறதே. இதில் கனவு வேறு காண வேண்டுமாக்கும்...
உண்மைய சொல்லு... இல்லாட்டி நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றார். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிரசன்னா. அதை பார்த்து 'என்னய்யா... அமைதியா இருந்தால் நடந்ததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?' என்று அதிர்ந்தார்.
சந்தேகப்படும் உன்னை எப்படி நான் சமாளிப்பது என்று கம்மிய குரலில் பம்மிய பிரசன்னாவிடம் தனது செல்போனில் இருந்த போட்டோவை காட்டி இனியாவது நம்புவியா? இது யார்? என்றார்.
இதுக்குத்தான் இவ்வளவு கோபமா? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பையும், கையையும் போட்டபடி அமர்ந்து இருக்கிறாளே? கேட்டு தகராறு செய்தார். இந்த தகராறு அன்றோடு முடிந்துவிட வில்லை.
அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. பிரசன்னாவும் பதிலுக்கு கத்த வீடே போர்க்களமாகிப் போனது. தகராறு முற்றிய நிலையில் அந்தப் பெண் கரமனை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னையும், தனது பிள்ளைகளையும் கொடுமைபடுத்துவதாக புகாரை கொடுத்து ஆதாரமாக கேமிரா அனுப்பி இருந்த போட்டோவையும் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ.பி.கோ.321 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடுகளை செய்தல்), 294 (பொது இடத்தில் ஆபாச செயலை செய்தல்), சிறார் சட்டம் 75 (குழந்தைகளை புறக்கணிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.
ஆணோ, பெண்ணோ... ஊருக்கு தெரியாது என்று தவறுகள் செய்தால் மனித கண்களை தாண்டி செயற்கை கண்களும் கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.






