என் மலர்
நீங்கள் தேடியது "alwar"
- திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
- காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.
இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.
பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.
- பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமலேயே உள்ளது.
- வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் குடிநீருக்காக நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்தே கிடப்பதால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆழ்வார் திருநகர், சரஸ்வதி நகர் 4-வது தெரு சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதன் பின்னர் இணைப்புக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆனால் சரியான முறையில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் செல்லாத காரணத்தால் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 6 அடி ஆழமுள்ள இந்த பள்ளத்தை தோண்டி சில நாட்கள் வேலை செய்தனர். இதன் பிறகு இந்த பள்ளத்தை அப்படியே போட்டுவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
இதன் காரணமாக அங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் செல்லும் அளவுக்கே அந்த சாலையில் தற்போது இடம் உள்ளது. சிறுவர், சிறுமிகளும் சைக்கிளில் வெளியில் செல்கிறார்கள்.
அவர்கள் பல நேரங்களில் பள்ளத்தையொட்டி குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் சிக்கி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டும் பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆளை விழுங்கும் அளவுக்கு உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமலேயே உள்ளது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். கேபிள் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் விபத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் பழுதாகி கிடக்கின்றன என்பதை கண்டுபிடித்து உடனடியாக அவைகளையும் ஒழுங்காக மூடி சரி செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி ஆழ்வார் திருநகர் போன்று பல்வேறு இடங்களிலும் திறந்து கிடக்கும் பள்ளங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் சமீபத்தில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி கரன் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார். பசுக்களை கடத்துவதாக பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர், ஆனால் ரக்பர்கான் கொலை வழக்கில் அவர்களிடம் எவ்வித கேள்வியும் எழுப்பப்படவில்ல எனவும் அவர் குற்றம்சாட்டினார். 4 மணி நேரமாக ரக்பர்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போலீசார் காட்டிய அஜாக்கிரதை காரணமாகவே அந்த வாலிபர் இறந்ததாகவும் எம்.பி கரன் சிங் தெரிவித்தார்.
மேலும், உன்னாவோ கற்பழிப்பு வழக்கை மேற்கோள் காட்டிய எம்.பி கரன் சிங் குற்றவாளிக்கு ஆதரவாகவே பா.ஜ.க தலைவர்கள் இருந்தார்கள் என தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பாராளுமன்றத்தில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் அல்வார் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.
இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.
அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.
இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.






