search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chopper"

    • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எமில் லாரன்ஸ் (வயது36). மீனவர்.
    • தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எமில் லாரன்ஸ் (வயது36). மீனவர். இவர் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்.

    மீனவர் மாயம்

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி எமில் லாரன்ஸ் தருவைக்குளம் கடற்கரையிலிருந்து சக மீனவர்கள் 11 பேருடன் கேரள மாநிலம் கொச்சின் கடற்கரை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும். இதற்கிடையே மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு தருவைக்குளம் கடற்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.

    தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார். சகமீனவர்கள் நீண்டநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஹெலிகாப்டர் உதவியுடன்

    இதைத்தொடர்ந்து கொச்சின் கடற்கரை போலீசார், எமில் லாரன்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சினில் இருந்து மீனவரை தேடும் பணிக்காக வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் மீனவரை தேடி வருகின்றனர். மேலும் கடலோர காவல்படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #yogiadityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்காக கஸ்தூரிபா காந்தி பள்ளியில் உள்ள மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், சில பிரச்சனை காரணமாக ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் இறக்கப்படாமல், அதற்கு 1 கி.மீ. முன்பாக உள்ள நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நலமுடன் இருப்பதாகும், திட்டப்படி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் பாரகுலி கிராமத்தில் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #yogiadityanath
    ×