search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் மீன்பிடித்த போது தவறிவிழுந்தார்-ஹெலிகாப்டர் உதவியுடன் தூத்துக்குடி   மீனவரை தேடும் பணி தீவிரம்
    X

    கடலில் மீன்பிடித்த போது தவறிவிழுந்தார்-ஹெலிகாப்டர் உதவியுடன் தூத்துக்குடி மீனவரை தேடும் பணி தீவிரம்

    • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எமில் லாரன்ஸ் (வயது36). மீனவர்.
    • தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எமில் லாரன்ஸ் (வயது36). மீனவர். இவர் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்.

    மீனவர் மாயம்

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி எமில் லாரன்ஸ் தருவைக்குளம் கடற்கரையிலிருந்து சக மீனவர்கள் 11 பேருடன் கேரள மாநிலம் கொச்சின் கடற்கரை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும். இதற்கிடையே மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு தருவைக்குளம் கடற்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.

    தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார். சகமீனவர்கள் நீண்டநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஹெலிகாப்டர் உதவியுடன்

    இதைத்தொடர்ந்து கொச்சின் கடற்கரை போலீசார், எமில் லாரன்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சினில் இருந்து மீனவரை தேடும் பணிக்காக வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் மீனவரை தேடி வருகின்றனர். மேலும் கடலோர காவல்படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×