search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.  முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
    X

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #yogiadityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்காக கஸ்தூரிபா காந்தி பள்ளியில் உள்ள மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், சில பிரச்சனை காரணமாக ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் இறக்கப்படாமல், அதற்கு 1 கி.மீ. முன்பாக உள்ள நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நலமுடன் இருப்பதாகும், திட்டப்படி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் பாரகுலி கிராமத்தில் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #yogiadityanath
    Next Story
    ×