என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பச்சை வைரசால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது -யோகி ஆதித்யநாத் காட்டம்
Byமாலை மலர்11 April 2019 6:25 AM GMT (Updated: 11 April 2019 6:25 AM GMT)
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியினர் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #YogiAdityanath
பரேலி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ், முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன.
காங்கிரஸ், முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X