search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பச்சை வைரசால் காங்கிரஸ்  பாதிக்கப்பட்டுள்ளது -யோகி ஆதித்யநாத் காட்டம்
    X

    பச்சை வைரசால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது -யோகி ஆதித்யநாத் காட்டம்

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியினர் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #YogiAdityanath
    பரேலி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.  கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன.



    காங்கிரஸ்,  முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக்  கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
    Next Story
    ×