search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    95 மின் நுகர்வோருக்குபெயர் மாற்றம் செய்து உத்தரவு
    X

    மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார், பெண் ஒருவருக்கு பெயர் மாற்ற உத்தரவு வழங்கிய காட்சி. அருகில் ராசிபுரம் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் உள்ளார்.

    95 மின் நுகர்வோருக்குபெயர் மாற்றம் செய்து உத்தரவு

    • ராசிபுரம் நகர் பிரிவு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.
    • முகாமில் 180 மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பட்டணம் ரோடு சாமுண்டி தியேட்டர் பின்புறம் உள்ள ராசிபுரம் நகர் பிரிவு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 180 மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம் மின் கோட்ட மின்வாரிய செயற்–பொறியாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். நகர தி.மு.க செயலாளர் என்.ஆர்.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாமக்கல் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் முகாமில் கலந்து கொண்டு 95 மின் நுகர்வோர்களுக்கு பெயர் மாற்றம் செய்து உத்தரவு வழங்கினார்.

    மீதமுள்ள மின் நுகர்–வோர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டு நடப்பில் வைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மின் நுகர்–வோர்கள் விரைவாக பெயர் மாற்றம் செய்து தந்த மின்வாரிய அலுவலர்களை பாராட்டினர். முகாமிற்கான ஏற்பாடு–களை ராசிபுரம் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்–பொறியாளர்கள் மோகன்ராஜ், வெங்கடா–சலம், ரவி, ராமராஜ் மற்றும் பிரிவு அலுவலர்கள், பணியா–ளர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×