search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் அலுவலகம்"

    • விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை.
    • இன்று மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    சென்னைக்கு வருகிற 27-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடி, முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையங்களை திறந்து வைக்கிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் சென்னையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்றுள்ள இ-மெயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூண்டி அருகேயுள்ள சாலியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் விக்டர் ஜேம்ஸ்ராஜா (வயது 35) என்பவரது முகவரியில் இருந்து சென்றுள்ள அந்த மெயிலில் பிரதமர் குறித்து அவதூறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த இ-மெயிலில் பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த நோக்கத்துடன் அந்த மெயில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரி சஞ்சய்கவுதம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பூண்டிதோப்புக்கு வந்து விக்டர் ஜேம்ஸ்ராஜாவை பிடித்து தஞ்சையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கல்வி அலுவலகத்தில் ஒரு அறையில் விசாரணையை தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது.

    இன்று 3-வது நாளாகவும் மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜாவிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை. விசாரணைகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வருகிறது. இதன் முடிவில் எதற்காக அவதூறு இ-மெயிலை மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜா அனுப்பினார் என்பது போன்ற பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் இன்று மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் மாணவர் விடுவிக்கப்படுவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் எடுத்து டெல்லிக்கு அழைத்து செல்வார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜாவின் தந்தை ஜெயபால் கூறுகையில், எங்களது மகன் எந்த தவறும் செய்ய வாய்ப்பு இல்லை. வீட்டில் இருந்து எங்களிடம் எதுவும் கூறாமல் எனது மகனை அழைத்து சென்றுள்ளனர் என்றார்.

    பாகிஸ்தானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து பேசியதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றம் சாட்டியதற்கு எந்த நம்பகத்தகுந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. #Modi #PMO #RTI
    புதுடெல்லி:

    கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி பலன்புர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரின் டெல்லி இல்லத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் தேர்தல் தொடர்பாக மூன்று மணிநேரம் ஆலோசணை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

    மோடியின் குற்றச்சாட்டு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் காங்கிரஸ் உடன் கைகோர்த்து செல்வாக்கை காட்ட நினைக்கிறது என பாஜகவின் மற்ற தலைவர்களும் மோடியை தொடர்ந்து பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், டிசம்பர் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாகெத் கோகலே என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அனுப்பினார். அதில், மோடியின் குற்றச்சாட்டு எதனை அடிப்படையாக கொண்டது. அதற்கான ஆதாரம் என்ன? என்ற கேள்விக்கு பதில் கேட்டிருந்தார்.




    மனு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த நிலையில், கோகலே மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு பலனாக 30 நாட்களில் பிரதமர் அலுவலகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பிரதமர் அலுலவகம் தனது பதிலை கோகலேவுக்கு அனுப்பியுள்ளது.

    அதில், அந்த தகவல்கள் (மோடியின் குற்றச்சாட்டு) இந்த அலுவலகத்தில் எந்த பிரிவிலும் இல்லை. பல்வேறு தரப்பில் இருந்து வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது. 

    அதாவது, காங்கிரஸ் தலைவர்களும் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் சந்தித்ததற்கு எந்த நம்பகத்தகுந்த ஆவணங்களும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
    உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. #KMJoseph #Collegium
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் கடந்த 2-ம் தேதி கூடியது. கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், கே.எம் ஜோசப் பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.



    கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த நீதிபதி ஏற்கனவே இருப்பதால், ஜோசப் பெயர் ஏற்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. #KMJoseph
    சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உடனே கொலிஜியத்தை கூட்ட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார். #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

    கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கூடிய கொலிஜியம் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அடுத்த மாதம் 22-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய நீதிபதிகளில் ஒருவராவார்.

    நீதிபதி கே.எம் ஜோசப்

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. #KMJoseph 
    ×