என் மலர்
நீங்கள் தேடியது "Urine"
- புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது.
- ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ராம்பால் ராவத் என்ற 65 வயதான முதியவர் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதை அங்கிருந்த சுவாமி காந்த் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். அவர் ராம்பால் ராவத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது. இது ராம்பால் குடும்பத்திற்கு தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.
- சிந்து நதி ஒப்பந்தம் குறித்து பேசிய மோடி ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என்று தெரிவித்தார்.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விளம்பரம் அமைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, பாகிஸ்தானுக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, "ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது. வர்த்தகமும் பயங்கரவாதமும் ஒருங்கே பயணிக்க இயலாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி பேச்சு நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை குறித்தும் மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பிரதமர் மோடி கூறிய மேற்கோளை, சிறுநீரக மருத்துவரான சிவேந்திர சிங் திவாரி, தனது மருத்துவமனைக்கு விளம்பரமாக மாற்றியது இணையத்தில் வைரலானது.
அந்த போஸ்டரில் "இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆகவே உங்கள் சிறுநீரில் இரத்தத்தைக் கண்டால், உடனடியாக ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகவும். அது தீவிரமான பிரச்சனையாக இருக்கலாம்" என்று விளம்பரம் செய்துள்ளார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விளம்பரம் அமைந்திருந்தாலும் பாஜக ஆதரவாளர்கள் இந்த விளம்பரத்திற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
- பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம்.
பொதுவாக ஆண்-பெண் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது சற்று வெளிறிய மஞ்சள் நிறத்துடன் எந்தவித நுரையும் இல்லாமல்தான் சிறுநீர் வெளிவரும். நுரையுடன் எப்பொழுதாவது வந்தால் பிரச்சனை இல்லை. பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஆனால் எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் வெள்ளை நிறத்தில் நுரைநுரையாக வருகிறதென்றால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.
சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். இது தவிர சிறுநீரக நோய்கள், நாள்பட்ட சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், புராஸ்டேட் சுரப்பி பிரச்சனை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுக்கும் போதும் சிலருக்கு சிறுநீர் நுரையுடன் வரலாம்.
இருப்பினும் கை, கால், முகம், வயிறு வீக்கம், உடல் தளர்வு, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சரியான தூக்கமின்மை, சிறுநீரின் அளவு கூடுதல் மற்றும் குறைதல், மேக நிறத்தில் கலங்கிய நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரில் அல்புமின் அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரக ஸ்கேன் பரிசோதனை போன்றவை மூலம் சிறுநீரகம் எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தினமும் உடலுழைப்பு, உடற்பயிற்சி இருக்க வேண்டும். சரிவிகித சத்துணவு சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
உணவில் புரதத்தை சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை நுரையுடன் சிறுநீர் கழிக்கிறீர்கள், உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை பொறுத்து பாதிப்புகளை அறியமுடியும். எனவே பயம் வேண்டாம். குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
- பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.
- 'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர்.
பாலிவுட் திரையுலகத்தில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல்.
பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்," தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியுள்ளார்.
இந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
சிகிச்சையின்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறிய மருத்துவர்கள் அது குணமடைய மூன்று மாதங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், தன்னை பார்க்க வந்த நடிகர் அஜய் தேவகனின் தந்தை தினமும் காலையில் கழிக்கும் தனது சிறுநீரை 15 நாட்களுக்கு குடித்து வர கூறினார். அந்த 15 நாட்களுக்கு இறைச்சி, மது, சிகரெட் போன்ற பழக்கங்களும் இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியதாக கூறினார்.
அவர் கூறியதுபோல் தானும் அதை பின்பற்றினேன். மேலும், 15 நாட்களுக்கு பிறகு எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது எனது காயம் சரியானது. மூன்று மாதங்கள் ஆகும் என கூறிய நிலையில், ஒன்றரை மாதங்களிலேயே தான் முழுவதுமாக குணமடைந்துவிட்டேன். அதற்கு தான் குடித்த என்னுடைய சிறுநீரகம் தான் காரணம்" என கூறினார்.
- அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார்
- பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு அருவருப்பூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோண்ட்வானா எக்ஸ்பிரசில் பி-9 பெட்டியில் கீழ் இருக்கையில் தனது 7 வயது மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் அவர்களுக்கு மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் மீது சிறுநீர் படிந்துள்ளது. உடனே தனது கணவரிடம் முறையயிட்ட அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் குவாலியர் நிலையத்துக்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீசார் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்ததை கேட்டறிந்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றார்.

அந்த ராணுவ வீரர் ரயிலில் தொடர்ந்து பயணித்த நிலையில் இறுதிவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க்காததால் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
- திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது அவரை ராம்பால் என்ற நபர் தடுத்துள்ளார்.
- ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியுள்ளார்.
டெல்லியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ராம்பால் என்ற நபரை கட்டையால் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வரும் நபர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் போர்வையை விலக்கி கட்டையால் தாக்க தொடங்குகிறார். பின்னர் தனது நண்பர்களுடன் பைக்கில் அங்கிருந்து தப்பித்து செல்கிறார்.
இந்த சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், ஆர்யன் என்பவரை கைது செய்தனர்.
ஆர்யன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது, அருகில் இருந்த கடையில் வேலை பார்த்து வந்த ராம்பால் அதை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியுள்ளார் என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.
- புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் கூறினர்.
- புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ஒருவர், புலியின் சிறுநீரகத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இதை பயன்படுத்தினால் முடக்கு வாத நோயை குணப்படுத்த முடியும் என்று கூறி 250 கிராம் சிறுநீர் பாட்டிலின் விலை சுமார் 50 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.596)-க்கு விற்கப்படுவதாக சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து குடித்தால் அல்லது வலி இருக்கும் இடத்தில் தடவினால் வலி குணமாகும். ஆனால், இதை எடுக்கும் போது உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்காக புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் கூறினர். இவ்வாறு விற்பனை செய்ய அவர்களிடம் வணிக உரிமம் மற்றும் செயல்பட அனுமதி இருப்பதால் அதை விற்க அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்தியாவில் பசுவின் கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதால் அதனை குடித்தால் நோய்கள் குணமாகும் என்று ஐஐடி இயக்குனர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு சிலர் ஆதரவுக் குரல் எழுப்பி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






