ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்.. நடவடிக்கை எடுக்காத ரயில்வே

அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார்பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்.. நடவடிக்கை எடுக்காத ரயில்வே
Published on

டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு அருவருப்பூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோண்ட்வானா எக்ஸ்பிரசில் பி-9 பெட்டியில் கீழ் இருக்கையில் தனது 7 வயது மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் அவர்களுக்கு மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் மீது சிறுநீர் படிந்துள்ளது. உடனே தனது கணவரிடம் முறையயிட்ட அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் குவாலியர் நிலையத்துக்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீசார் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்ததை  கேட்டறிந்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றார்.

அந்த ராணுவ வீரர் ரயிலில் தொடர்ந்து பயணித்த நிலையில் இறுதிவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க்காததால் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com