search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "capital"

    2 ‘ஜி’ வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கேட்டவர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. #2GCase #DelhiHighCourt #TreePlant
    புதுடெல்லி:

    மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, 2 ‘ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு.

    இதில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்தன.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்த சட்ட விரோத பணபரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து டெல்லி தனிக்கோர்ட்டு 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

    இதே போன்று சி.பி.ஐ. தொடுத்த ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை அதே நாளில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை செய்தது.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மேல்முறையீடு செய்தது.

    அதைத் தொடர்ந்து மறுநாளில், ஊழல் வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்து வருகிறார்.

    இதில் சுவான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் சாகித் பல்வா, குசேகான் பழம், காய்கறி நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால் மற்றும் டைனமிக் ரியால்டி நிறுவனம், டி.பி. ரியால்டி நிறுவனம், நிகார் கட்டுமான நிறுவனம் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்கிய நீதிபதி நஜ்மி வாஜிரி, அவர்கள் ஒவ்வொருவரும் தெற்கு டெல்லி பகுதியில் தலா 3 ஆயிரம் மரம் நடுமாறு உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக சாகித் பல்வாவும், ராஜீவ் அகர்வாலும் நேரிலும், பிற 3 நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளும் சம்மந்தப்பட்ட வன அதிகாரி முன் வரும் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

    வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #2GCase #DelhiHighCourt #TreePlant 
    மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
    சிட்னி:

    யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேமை பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதேபோல் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை திறந்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகமும் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.



    இந்நிலையில், மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால், அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து மாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

    அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பாலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
    மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது. #Chhattisgarh #Vajpayee
    ராய்ப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது  உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. 

    இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது. 
    ×