search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அருகே மீனவர் வீட்டில் 35½ பவுன்  நகையை திருடிய வாலிபர் கைது - சி.சி.டி.வி. காட்சி மூலம் சிக்கினார்
    X

    திருச்செந்தூர் அருகே மீனவர் வீட்டில் 35½ பவுன் நகையை திருடிய வாலிபர் கைது - சி.சி.டி.வி. காட்சி மூலம் சிக்கினார்

    • ஜெயபாண்டியன் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
    • இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது28). மீனவரான இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

    35½ பவுன் கொள்ளை

    பின்னர் வந்து பார்த்த போது அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து பீரோவில் இருந்த 35½ பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    இது குறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    வாலிபர் கைது

    அதில் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் ஜெயபாண்டியன் வீட்டில் நகையை திருடி சென்றதும், கடந்த மாதம் ஜெயபாண்டியன் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பிரபாகரன் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×