search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman house"

    • ஜெயபாண்டியன் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
    • இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது28). மீனவரான இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

    35½ பவுன் கொள்ளை

    பின்னர் வந்து பார்த்த போது அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து பீரோவில் இருந்த 35½ பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    இது குறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    வாலிபர் கைது

    அதில் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் ஜெயபாண்டியன் வீட்டில் நகையை திருடி சென்றதும், கடந்த மாதம் ஜெயபாண்டியன் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பிரபாகரன் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிய மீனவர் வீட்டில், பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன். இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட அவர் குழி தோண்டியுள்ளார். 5 அடி தோண்டியதும் பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கிடைத்துள்ளது.

    இதனை அடுத்து, போலீசாருக்கு எடிசன் தகவல் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் அங்கு வந்து குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    ×