என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரகேரளம்புதூர் அருகே கல் குவாரியால் விவசாய பயிர்கள் பாதிப்பு-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
- பாறை துகள்கள் பயிர்கள் மீது படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
- கல்குவாரியால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள குறிச்சாம்பட்டி கரையாளனூர் கிராமத்தில் கிணற்று பாசனங்கள் மூலம் விவசாய பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் ராட்சத எந்திரம் மூலம் கல் அரவை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், பயிர்கள் மீதும் படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஏமையா, திரவியம் உள்ளிட்ட விவசாயிகள் கூறும் போது, கல் அரவை பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் எங்களது பயிர்கள் மீது படிந்து அவற்றை கருக செய்கிறது. இதுகுறித்து நாங்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மேலும் இந்த கல்குவாரியால் வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் எங்கள் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த கல்குவாரியால் கரையாளனூர் பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






