search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி"

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில், நவ.11-

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படு கிறது. இதையடுத்து புத்தா டைகள் எடுப்பதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் குவிந்திருந்தனர்.

    இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வடசேரி, செட்டிகுளம் உள்பட நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். நாகர்கோவில் நகரில் கூட்டம் அலைமோதியதை யடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, வேப்பமூடு, செட்டிகுளம் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஜவுளி கடைகளில் மட்டுமின்றி பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனைக்கு வந்திருந்த விதவிதமான பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலை யங்களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. இதையடுத்து கடை வீதிகளிலும் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் கை வரிசை காட்டக்கூடும் என்ப தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு மாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்.

    கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குழித்துறை, பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி வெளியூர்களி லிருந்து சொந்த ஊருக்கு பஸ்களில் வந்த பொது மக்கள் அதிகமானோர் அதிகாலையில் பஸ்களை விட்டு இறங்கி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

    இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    ×