search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign"

    • ஈரோட்டில் வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
    • இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் பெரிய சரக்கு லாரிகள் மூலம் டெல்லி, மும்பை, மகாரா ஸ்டிரா உள்ளிட்ட வடமாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    இதற்காக ஈரோடு பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளி மாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கு வதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களே சுமை தூக்கும் பணியாளர்களை நியமித்துள்ளது.

    இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முன்பணம் மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவை நிறுவனம் வழங்கவில்லை என்று சுமை தூக்கும் தொழிலா ளர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்நடவ டிக்கையை கண்டித்து நேற்று பவானி சாலையில் பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

    இதை கண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் அசோசியேசன் நிர்வாகி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட போவதாக வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்தது.

    அதன்படி ஈரோட்டில் பவானி ரோடு, பார்க்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றி, இறக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 100 லாரிகளில் சரக்குகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றது. இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து 50 லாரிகள் ஈரோட்டிற்கு சரக்கு கொண்டு வருகின்றது.

    இப்பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, ஆயில், கெமிக்கல், தானியங்கள் ஆகியவை புக்கிங் செய்யப் படாமல் தேக்கமடை ந்துள்ளது.

    • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்னும் 15 நாளில் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.#Vijayakanth #PremalathaVijayakanth #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகத்தில் இன்று பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது பிரேமலதா பேசியதாவது:-

    இப்போது எல்லோரும் ‘மீடூ’ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் ‘மீடூ’ எப்படி வரும்.

    தே.மு.தி.க.வை குடும்ப கட்சி என்று சொல்வார்களோ? என்று யாரும் நினைக்க வேண்டாம். அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை.



    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அவர் வெளிநாடு செல்வார்.

    அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சி தே.மு.தி.க. தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார். #Vijayakanth #PremalathaVijayakanth  #DMDK
     
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளச்சேதத்துக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் அம்மாநில மந்திரிகளின் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. #Keralafloods #Centredeniespermission #Keralaministers
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத பெருமழையின் எதிரொலியாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 493 பேர் உயிரிழந்தனர்.

    லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், தொழிலதிபர்கள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர்.

    கேரள மக்கள் அதிகமாக பணியாற்றிவரும் வளைகுடா நாடுகளும் பண உதவி செய்ய முன்வந்தன. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு மறுத்து விட்டது.



    இதற்கிடையே, வெளிநாடுகளில் வாழும் கேரள மாநிலத்து மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட முதல் மந்திரி பினராயி விஜயன் தீர்மானித்தார். இதன்படி, இம்மாதம் 17-ம் தேதி (இன்று) முதல் 21-ம் தேதிவரை அம்மாநிலத்தை சேர்ந்த 17 மந்திரிகள் ஆளுக்கொரு நாடாக சென்று கேரள மக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டது.

    இதில் ஒரு பகுதியாக முதல் மந்திரி பினராயி விஜயன் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்வார். 21-ம் தேதி அவர் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், பினராயி விஜயன் பயணத்துக்கு மட்டும் அனுமதி அளித்த மத்திய அரசு இதர மந்திரிகள் செல்ல அனுமதி மறுத்து விட்டதாக கேரள அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. #Keralafloods #Centredeniespermission #Keralaministers 
    ×