search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்திலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்திலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்

    • உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
    • நீரா பானம் பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமை யிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறீர்கள். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த நீரா பானம், பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்டுகிறது.

    இந்தநிலையில் நீரா பானத்தை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக இயக்குனர் பாலசு ப்ரமணி யம் கூறியிருப்பதாவது :- அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரினை கொடுத்துள்ளது இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீரா பானம் அமெரிக்காவிற்கு கண்டைனர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

    இதன் ஆண்டு விற்பனை ரூ .25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டைன ர்களில் அனுப்ப திட்டமிட ப்பட்டுள்ளது. இதன் விற்பனை அதிகரி த்தால் தென்னை விவசாயிக ளின் வாழ்வாதா ரமும் மேலோங்கும் என்றார்.

    Next Story
    ×