search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர்வாடி தர்கா தாயத்துகள்
    X

    வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர்வாடி தர்கா தாயத்துகள்

    • ஏர்வாடி தர்கா தாயத்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • இந்த தாயத்தை கையில் கட்டி கொண்டால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு நெருங்க முடியாது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்த தர்காவின் மகிமையை அறிந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இங்கு சாதி, மதம், இனம் கிடையாது. அனைத்து சமுதாயத்தினர் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வருகின்றனர். பிரார்த்தனை செய்கி ன்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

    இந்த தர்காவில் பாதுஷா நாயகம் அடங்கியுள்ள மண்டபத்தின் ஹாலில் தர்கா ஹக்தார்களால் விற்பனை செய்யப்படும் தாயத்து அபூர்வ சக்தி படைத்தது என பக்தர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக இங்கு பிரார்த்தனைக்கு வரும் பக்தர்கள் தாயத்தை மறக்காமல் வாங்கி செல்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தாயத்து களை வாங்கி அனுப்பி வருகின்றனர். தாயத்தின் மகிமை குறித்து தர்கா நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது:-

    ஆன்மீக சக்தியின் மீது பக்தர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏர்வாடியில் நாள்தோறும் பல்வேறு அதிசயங்கள், அற்புதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. தர்காவிற்கு நேரடியாக வந்தால் இதனை காணலாம். முகமது நபி (ஸல்) கட்டளையை பாதுஷா நாயகம் ஏற்று அல்லாவுக்காக பல்வேறு தியாகங்களை செய்தார்.

    இதன் காரணமாக பாதுஷா நாயகம் அவர்களுக்கு இறைவன் பல்வேறு மகிமைகளை அளித்தார். அந்த மகிமைகள் தான் தற்போது தர்காவில் நடந்து வருகிறது. இந்த தாயத்தில் பாதுஷா நாயகத்தின் பெயர் நாமம் உள்ளது. இதை கையில் கட்டி கொண்டால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு நெருங்க முடியாது.

    குறிப்பாக கேரள மாநில மக்கள் இதன் மகிமையை நன்கு அறிந்துள்ளனர். இந்த தாயத்து உள்ளே எழுதப்பட்டுள்ள பெயர் நாமம் சிறப்பு ஆலிம்களை கொண்டு எழுதப்பட்டு பாதுஷா நாயகத்தின் சமாதியில் வைத்து முறையாக பிரார்த்தனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தண்ணீர் புகாத வகையில் தாயத்து தயாரிக்கப்படுகிறது.

    ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இதை கட்டிக் கொள்ளலாம். சபரிமலை பம்பையில் உள்ள வாவர் சாகிப் தர்காவிற்கு ஆயிரக் கணக்கில் இங்கிருந்து ஆர்டர் செய்து பெற்று சென்று அங்கு ஏர்வாடி தர்கா தாயத்து விற்பனை செய்கின்றனர். தர்கா கமிட்டி வழியாகவும் வெளிநாடு மற்றும் உள் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×