என் மலர்tooltip icon

    சமையல்

    பால் பாயாசம் முதல் பாகற்காய் வரை... பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    பால் பாயாசம் முதல் பாகற்காய் வரை... பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
    • இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.

    * பால் பாயாசம் சுவையாக இருக்க பாதாம் பருப்பை தோல் நீக்கி அரைத்து சேர்க்க வேண்டும்.

    * பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, சமைத்தால் காரத்தன்மை குறையும்.

    * அப்பளத்தின் மீது லேசாக நெய் தடவி, சிறிது மிளகுத் தூள் தூவி சுட்டெடுத்தால் சுவை நன்றாக இருக்கும்.

    * ஓட்ஸை கஞ்சியாக குடிப்பதை விட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வடை மாவு நீர்த்து விட்டால், அதன் மீது சிறிது பச்சரிசி மாவு, கைப்பிடி ரவை சேர்த்தால் அதிகப்படியான நீரை அது உறிஞ்சி விடும்.

    * பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.

    * சூடான எண்ணெய்யில் சிறிது மைதா மாவு தூவினால் அந்த எண்ணெய்யில் எதை பொரித்தாலும் சட்டென்று ஒட்டாது.

    * தக்காளி கெடாமல் இருக்க காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

    * தேங்காயை மேல் நோக்கியவாறு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.

    * அரிசி, ரவா, கோதுமை டப்பாவில் பூச்சி வராமல் இருக்க ஒரு சிறு துண்டு வசம்பை துணியில் கட்டி டப்பாவில் போட வேண்டும்.

    * இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.

    * தயிரில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் எளிதில் புளிக்காது.

    * பாகற்காயை உப்பு, மஞ்சள், வெல்லம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் கசக்காது.

    Next Story
    ×