search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கோயம்புத்தூர் ஸ்டைல் அரிசி பருப்பு சாதம்
    X

    கோயம்புத்தூர் ஸ்டைல் அரிசி பருப்பு சாதம்

    • சாம்பார் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்

    துவரம் பருப்பு - கால் கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 4

    காய்ந்த மிளகாய் - 3

    பூண்டு - 5 பல்

    தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

    சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் தக்காளி வதங்கியதும் தண்ணீரை வடித்து விட்டு அரிசி, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.

    * தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.

    * பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான அரிசி பருப்பு சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×