என் மலர்
நீங்கள் தேடியது "ஐதராபாத் பிரியாணி"
- ‘2025-ம் ஆண்டின் உலகின் சிறந்த அரிசி உணவுகள் பட்டியல்’ என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் பெரும்பாலானவை ஜப்பானிய உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் பிரியாணி உலகின் சிறந்த அரிசி உணவுகளில் 10-வது இடம்பிடித்துள்ளது. ஆன்லைன் பயண வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ், '2025-ம் ஆண்டின் உலகின் சிறந்த அரிசி உணவுகள் பட்டியல்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ஐதராபாத் பிரியாணி 10-வது இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 50 உணவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய உணவாகும்.
சமையல்காரர்கள் மற்றும் உணவு விமர்சகர்களின் மதிப்புரைகள் மற்றும் பயணிகள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐதராபாத் பிரியாணி முதல் 10 அரிசி உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் பெரும்பாலானவை ஜப்பானிய உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 இடங்களில் உள்ள முதல் 3 உணவுகளான நெகிடோடோன், சுஷி மற்றும் கைசென்டன் ஆகியவை ஜப்பானிய உணவு வகைகள் இந்தியாவில், லக்னோ, காஷ்மீரி, கொல்கத்தா உட்பட வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்றவாறு சிறப்பு பிரியாணிகள் உள்ளன, ஆனால் ஐதராபாத் பிரியாணி முன்னணியில் உள்ளது.
- கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- ராஜமவுலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.
கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முதல் தோற்றத்தை தனது சமூக வலைதளத் பக்கத்தில் வெளியிட்டுள்ள எஸ்.எஸ்.ராஜமவுலி, "உலக அரங்கில் இந்திய சினிமாவை மறுவரை செய்த பெண். மீண்டும் வருக. மந்தாகினியின் எண்ணற்ற சாயல்களை உலகம் காண காத்திருக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.
ராஜமவுலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர், ஐதராபாத் பிரியாணியை இதுவரை சாப்பிட முயற்சித்தது இல்லையா? என கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, "ஐதராபாத் பிரியாணி தான் உலகிலேயே சிறந்தது" என பதில் அளித்தார்.
- குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
- பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்
திருப்பதி:
ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.
இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.
இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-
பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.
இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






