என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியாணியில் 20 தூக்க மாத்திரை.. சாப்பிட்டதும் மயங்கிய கணவன்.. தலையணையால் கதையை முடித்த மனைவி
    X

    பிரியாணியில் 20 தூக்க மாத்திரை.. சாப்பிட்டதும் மயங்கிய கணவன்.. தலையணையால் கதையை முடித்த மனைவி

    • பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
    • கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் பொய்யானவை.

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு.

    சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி, கோபி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

    இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட மாதுரி கடந்த ஜனவரி 18 இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடித்துக் கலந்து தனது கணவருக்குக் கொடுத்துள்ளார்.

    பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

    இருவரும் சேர்ந்து தலையணையால் சிவநாகராஜுவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.

    கொலையைச் செய்த பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மாதுரி நாடகமாடியுள்ளார்.

    சிவநாகராஜுவின் உடலில் காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

    பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டது உறுதியானது.

    கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் வெளியான நிலையில் அவற்றை மாவட்ட எஸ்.பி மறுத்துள்ளார்.

    மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×